கொரோனா தொற்றுக்கு தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலிகடாவா? உயர் நீதிமன்றம் விளாசல்

கொரோனா தொற்றுக்கு தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலிகடாவா? உயர் நீதிமன்றம் விளாசல்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததற்கு முன்பு, கடந்த மார்ச் மாதத்தில் 29 வெளிநாட்டவர்கள், 6 இந்தியர்கள் உட்பட 35 பேர் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி வழக்கினை பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹமத் நகர் மாவட்டத்தில் அனுமதியின்றி தப்லிக் ஜமாத் அமைப்பு மாநாடு நடத்தியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.   இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளை நீதிமன்றம், “ஒரு தொற்று நோய் … Read more

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற தலைவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பினை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என, வழக்கை விசாரிக்கும் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் விசாரணையானது கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் … Read more

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW) நிறுவனம்: LIC-Life Insurance Corporation Of India வேலை: மத்திய அரசு வேலை பணி: Insurance Advisor காலிப்பணியிடங்கள்: 5000 வயது வரம்பு: 18-45 தேர்வு: நேர்காணல் தகுதி: எஸ்.எஸ்.சி / மெட்ரிகுலேஷன் / மத்திய / மாநில அரசு வாரியம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. பணியிடம்: சோலாபூர் , மகாராஷ்டிரா விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/02/2021 இணையதள முகவரி: தகுதியும் விருப்பமும் … Read more

இந்தியாவில் 57 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் 57 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 30,44,941 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 912 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 56,706 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 22,80,567 பேர் கொரோனா தொற்றிலிருந்து … Read more

இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்!

இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்!

இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்! தமிழ்நாட்டு இயற்கை மருத்துவர்களை யோகா பயிற்சியின் போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் அமைப்பின் செயலர் ராஜேஷ் அவர்களின் மீது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனை எதிர்த்து தமிழகத்தின் கட்சி பிரமுகர்களான, மு க ஸ்டாலின்,அன்புமணி ராமதாஸ்,கனிமொழி, வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்டோரும்,கவிஞர் வைரமுத்தும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு மொழி வெறி தலைக்கேறி இருப்பது வெட்கக்கேடு என்றும்,இதனை அரசு … Read more

ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்!

ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்!

ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்! தெலுங்கானாவில் மல்கஜகிரி பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால்,மேகம் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.மேலும் இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் பல மணிநேரம் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் மக்களுக்கு அதீத கண்ணெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தால் விஷவாயு தாக்கியதில் மக்கள் உயிரிழந்தை எண்ணி தெலுங்கானா மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்!

Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்!

Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்! மனிதர்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடும் தொலைபேசி ஒன்றை லாவா நிறுவனம் லாவா பல்ஸ் என பெயரிட்டு வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் கொண்ட உலகின் முதல் தொலைபேசியை லாவா வெளியிட்டுள்ளது. லாவா பல்ஸ் என்பது இந்தியாவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் புதிய அம்சமான தொலைபேசியாகும், இதய துடிப்பை கண்டறிந்து ஒரு … Read more

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் வீடிழந்தவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். அங்கு சென்றபோது, மூணாறு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கவேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “மூணாறு நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா – சென்னை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா - சென்னை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை வரும் 25ம் தேதி முதல் செப் 6ம் தேதி வரை இயக்குகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. … Read more

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா வைரஸிருக்கு,பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அதி தீவிரமாக இறங்கி உள்ளனர்.இதில் பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட சோதனைக்கு கூட சென்றுவிட்டது. இந்நிலையில்,இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் ஆலோசகர் திடுக்கிடும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு: கொரோனா வைரஸை தடுக்க பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஒரே ஒருமுறை மட்டும், நம் உடம்பில் … Read more