மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

0
110
No fees for students!! Action order issued by the Government of Tamil Nadu!!
No fees for students!! Action order issued by the Government of Tamil Nadu!!

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இடம் பெறுகின்றனர்.

அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கொடுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.பின்னர் மீதம் உள்ள இடங்களில் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து நிரப்பி கொள்கின்றனர்.

இதேபோன்று தமிழகத்தில் 20 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதில்  7.5 சதவீதம் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

மேலும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகின்றது.இதற்கு இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விண்ணபங்கள் வரவேற்கப்பட்டு சேர்கை நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும்  மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் விடுதி ,பயிற்சி ,தேர்வு உள்ளிட்ட கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

author avatar
Parthipan K