என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!!

0
28

என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!!

இந்த காலத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம்.என்ன செய்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவே இல்லை என்று பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு உணவைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

செய்முறை:
காய்கறிகளிலேயே மிகவும் சிறிய காய் என்று கூறப்படுவது தான் சுண்டைக்காய். இந்த சுண்டைக்காயை உரலில் போட்டு சிறிதளவு தட்டி இரண்டாக உடையுமாறு செய்து பிறகு தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். இந்த தண்ணீரில் சுண்டைக்காயை நன்றாக அழுத்தி பிசைந்து விட்டு பிறகு வடிகட்டி சுண்டைக்காயை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி அளவு சமையல் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி அளவு கடுகு சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் இதனுடன் ஐந்து அல்லது ஆறு வரமிளகாய் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஐந்து பல் பூண்டு மற்றும் நாம் எடுத்து வைத்திருக்கக்கூடிய சுண்டைக்காயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

நன்கு வதக்கிய பிறகு இதை ஆற வைத்துவிட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் இதை சேர்த்து இதனுடன் சிறிதளவு புலியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஒரு டப்பாவை சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து தினமும் சூடு படுத்தி சாப்பிட்டு வரலாம்.

இந்த சுண்டைக்காய் துவையலை இட்லி தோசை சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிட்டு வரலாம். இதை ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையவே இல்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வை கண்டிப்பாக கொடுக்கும்.

இந்த சுண்டைக்காய்க்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய தன்மை உள்ளது. மேலும் சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ பலன்கள் மிகுந்து காணப்படுகிறது.

சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள்:
இந்த சுண்டைக்காயானது எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் பயன்படுத்தாமல் இயற்கையாக நம் மண்ணில் விளையக்கூடியது. இது அதிகப்படியான நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இந்த சுண்டைக்காய் ஆனது உடலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிப்பது முதற்கொண்டு கொழுப்புகளை கரைப்பது வரை அனைத்து வேலையும் செய்கிறது.

மேலும் இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மேலும் ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து ரத்த குழாய்களில் படிவதையும் இது தடுக்கும். ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்.

இந்த சண்டைக்காயில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து ரத்த சோகையை எதிர்த்து போராடக் கூடியது. நரம்பு மண்டலத்திற்கு சக்தியை கொடுக்கும் மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலுமாக சரி செய்யும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை நன்கு சுரக்க வைக்க கூடிய சக்தி இந்த சுண்டைக்காய்க்கு உள்ளது. இதுபோன்று இன்னும் ஏராளமான பயன்கள் சுண்டைக்காவினால் உடலுக்கு ஏற்படுகிறது.

author avatar
CineDesk