இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

0
108

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பதால் தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

 

பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் இருக்கின்றது . பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள்,காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

 

author avatar
Parthipan K