இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் தகுதியானவர் தானா? காங். எம்.பி மாணிக்தாகூர் காட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து காங். கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களைப் பொறுத்தவரை கட்சியின் தலைவர் யாராக இருப்பினும் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். அதன் அடிப்படையில் பார்த்தால், சோனியாகாந்தி, ராகுல்காந்தி தான் தலைவர்களாக இருக்க முடியும்” என மாணிக் தாகூர் கூறியிருப்பது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் … Read more

காங்கிரஸ் கட்சிக்கு இந்த இருவரில் ஒருவர் மட்டும் தான் தலைவராக வரவேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகுவதால் அடுத்த தலைவர் யார் என்பதில் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் நாட்டின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் … Read more

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60 க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கான பதவிப் பிரமாணத்தை ஏற்க குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். நாளை மூன்றாவது முறையாக டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். கடந்த கால அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டியை பெற்றுள்ளது ஆனால் எந்த கட்சிக்கு முதல்வர் பதவி என்பதில் நடந்து வரும் அதிகார போட்டி காரணமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் அம்மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது இந்த நிலையில் சரத்பவாரின் தேசியவாத … Read more