ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா – சென்னை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை வரும் 25ம் தேதி முதல் செப் 6ம் தேதி வரை இயக்குகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. … Read more

இனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!

உலகம் முழுவதும் கொரோனா நான் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் முதலில் கொரோனா பாதிப்பு பதிவாகியது. கொரோனா குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட போதே அம்மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது.              இதன் காரணமாக இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பிற்கான எண்ணிக்கை குறைவாக தற்பொழுதும் உள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளையும் அம்மாநில மக்களுக்காக கேரள அரசு அறிவித்தது. இதில் ஒரு பாகமாக கேரள … Read more

குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண உதவி! மத்திய அரசு அறிவிப்பு

Parliament-News4 Tamil Online Tamil News

கேரள மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் விமானத்தில்பயணம் செய்த 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவமானது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.மேலும் இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் … Read more

கேரளா மாநிலத்தில் நடந்த அடுத்த சோகம்! தமிழர்களை காக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

கேரளத்தில் விமான விபத்து மற்றும் நிலச்சரிவு என தொடர்ந்து இரட்டை சோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரு துயரங்கள் ஏற்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 தமிழர்கள் உயிருடன் புதைந்து உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு விமான … Read more

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்..!

கோழிக்கோடு: விமான விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகள் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சார்பில், கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய விமானப் … Read more

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானம் கேரளாவில் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. தரையிறங்கும் நேரத்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதனால் விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் 2வது முறை விமானம் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போதுதான் விமானம் தரையில் … Read more

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்! பிரதமர் அறிவிப்பு!!

கேரள மாநிலம் இடுக்கியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த மழை ஆக.10ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியில் இன்று பெய்த கன மழைக்கு பெரிய அளவில் நிலச்சரிவு … Read more

மீண்டும் முழு கொள்ளளவை எட்ட இருக்கும் ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை!!

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி அணையே ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை என்றும் புகழ் பெற்றிருக்கிறது. இதுவரை 4 முறை மட்டுமே தனது முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 5வது முறையாக மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. கேரளாவில் இருக்கும் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 167.68 மீட்டர் உயரத்தில் 72 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு  பிரம்மாண்டமனது இந்த … Read more

முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சித் தலைவர் சத்தியாகிரக போராட்டம்!

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று தனது வீட்டில் ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உள்படுத்திக் கொள்ள வலியுறுத்திஹயும் ரமேஷ் சென்னிதலா இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக … Read more

நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் குழந்தை இறந்த சோகம்!!

நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்தது.   கேரளா மாநிலத்தில் உள்ள அலுவா என்ற பகுதியில் 3 வயது குழந்தை நாணயத்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.   அங்கு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது குழந்தையின் வயிற்றில் நாணயம் சிக்கியிருப்பது தெரிந்தது. இருப்பினும் அந்தக் குழந்தையை கரோனா பாதிப்புள்ள … Read more