கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

0
128

கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்பாகக் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் முடிவெடுக்க மத்திய அரசு அதிகாரம் வழங்கியிருந்தது

இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாட்டுக்களை விதித்த தமிழக அரசு 26ம் தேதி முதல் 29ம் தேதி முழு ஊரடங்கை அறிவித்து ஆனை வெளியிட்டிருந்தது. இதனால் தள்ளுவண்டிகளில் மட்டுமே காய்கறி மற்றும் பழங்களை விற்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இன்றுடன் அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், இதற்கு முன் இருந்த ஊரடங்கின் நிலை நீடிக்கும் எனத தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

“சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (புதன்கிழமை) இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.

எனினும், நாளை (வியாழக்கிழமை) மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்த் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்”. என்று கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K