கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!..

0
74
The incident that took place in the college, the student scratched his face with this weapon because his girlfriend refused to talk!.Police intensive investigation!..
The incident that took place in the college, the student scratched his face with this weapon because his girlfriend refused to talk!.Police intensive investigation!..

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!..

சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் இந்த மாணவி.இவருடைய வயது இருபது.இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் இவருடைய வயது 19. இவர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

சில காலம் இது காதலாக மலர்ந்தது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.இந்நிலையில் இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. மேலும் மாணவியின் பெற்றோர் கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி கடந்த இரண்டு மாதங்களாக காதலனிடம் அதாவது பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவி கல்லூரி வகுப்பை  முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே வந்த பிரசாந்த் மாணவியிடம் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய்? நான் என்ன செய்தேன்? என்று பல கேள்விகளை மாணவியிடம் எழுப்பினார்.

பேசிக்கொண்டே இருக்கும் நிலையில் தான் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய கூர்முனையை கொண்ட கத்தியை எடுத்து மாணவி முகத்தில் கீறி விட்டு தப்பி ஓடிவுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் காயமடைந்து அந்த மாணவி  மயங்கிய நிலையில் கீழே விழுந்தார். இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் அந்த மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். காவல்துறையினரோ அந்த வழக்கை மேற்கொண்டு மாணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரசாந்த் காவல்  நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாந்த் நீதிமன்றத்தில் காவல் சிறையில் அடைக்கப்பட்டார்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.

author avatar
Parthipan K