இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!!

0
86

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!!

சொத்து பரிமாற்றம் என்பது ஒரு உயிருள்ள நபர் சொத்துக்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மற்ற உயிருள்ள நபர்களுக்கு அல்லது நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தனக்கு மாற்றும் ஒரு செயலாகும்.

1882 ஆம் ஆண்டின் சொத்து பரிமாற்றச் சட்டம் என்பது சொத்து பரிமாற்றங்களை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் இந்தியாவில் உள்ள சட்டமாகும். அத்தகைய இடமாற்றங்களைச் செயல்படுத்த, என்ன சொத்துக்கள் தெரிவிக்கப்படலாம் என்பதை மட்டுமல்ல, அத்தகைய பரிமாற்றங்கள் செயல்படும் வழிமுறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இடமாற்றம் செய்பவர் நிபந்தனையின்றி எதையாவது மாற்றுவதாகக் கூறப்படுகிறது, அவர் எந்த நிபந்தனையும் இல்லாமல் தனது சொத்தை மாற்றத் தயாராக இருக்கிறார், அல்லது அவர் எந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றால், அது நிபந்தனைக்குட்பட்ட பரிமாற்றமாக கருதப்படும்.

சொத்துகளை வாங்குவதற்கு முன்பு, அந்த சொத்துகள் குறித்த ஆவணங்களை சரி பார்ப்பது அவசிய தேவையாகி விட்டது.ஒரு சொத்தை வாங்க விரும்புவர்கள், அந்த சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்பவர் பெயரில்தான் அந்த சொத்து உள்ளதா என்பதை அறிவதற்காக, வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்க்கின்றனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் சொத்து வைத்திருக்கும் நபருக்கே தெரியாமல் அவரது சொத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதற்கு முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை, முதலில் பட்டா எப்படி பெயர் மாற்றப்படுகிறது என்றால் ஒரு நிலத்தை நாம் வாங்கும் போதும் இல்லையென்றால் பட்டாவில் ஒரு பெயரும் பத்திரத்தில் ஒரு பெயரும் இருக்கும் பொழுது பெயர் மாற்றம் செய்யப்படும்.

பட்டாவில் தகவல்கள் தவறாக இருக்கும் பொழுது பெயர் மாற்றம் செய்யப்படும்.இப்படி நீங்கள் பட்டா மாற்றம் செய்யப்படும் போது அதற்கு அரசு 15 நாட்களுக்குள் உங்களுக்கு பட்டாவை மாற்றம் செய்து தர வேண்டும்.

அப்படி அரசு 15 நாட்களுக்குள் உங்களது பட்டாவை தரவில்லை என்றாலும் நாட்களை தாமதப்படுத்திக் கொண்டே சென்றாலும் நீங்கள் சட்டத்தின் வழிநடவடிக்கை எடுக்கலாம்.இதற்காகவே ஒரு அமைப்பு உள்ளது அதுதான் Right to Information Act அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இதன் மூலம் register office மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன மற்றும் revenue department மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னவென்று தகவல் அடங்கிய RTI மனு ஒன்றை எழுதி அதன் மீது ஸ்டம்ப் ஒட்டி அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விட வேண்டும்.

இதற்கு 30 அல்லது 40 நாட்களில் பதில் வர வேண்டும் இல்லையென்றால் முதல் மேல் முறையீடு செய்யலாம் திரும்பவும் பதில் வரவில்லை என்றால் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.

இவ்வாறு நாம் எந்தவித லஞ்சமும் கொடுக்காமல் நமது இடத்தை நாம் நமது பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் மற்றும் பட்டா பெற்றுக் கொள்ளலாம்.

 

author avatar
Parthipan K