இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! இந்தியா அபார வெற்றி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்னுக்கு ஆட்டமிழந்தது அதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணியை 131 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்தது.

இதன் மூலமாக தற்போது தொடரை 2 க்கு 1 என இருந்து வருகிறது. ஆனால் இந்தப் போட்டியை வென்று விட்டால் தொடரை வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் போட்டியில் தென்னாபிரிக்க அணி எந்தவிதமான துடிப்புமில்லாமல் விளையாடியது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் பார்க்கப்பட்டது.

இந்திய அணி தரங்கள் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் குஷிப்படுத்த பிட்ச் போட்டது போதும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதும் போதும் என போடு ஸ்லோபிட்சை என்று தெரிவித்தார்கள்.

ரிஷப் பண்ட் கேப்டனாக முதல் வெற்றியை சாதித்திருக்கிறார் மறுபுறம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை முதல்முறையாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றிருக்கிறது என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுவிட்டது.

ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அதிரடி காட்டினார் அவருடைய அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளை சந்தித்து 57 ரன்களை சேர்த்தார். 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் விளாசி களத்தில் நின்றார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் தன்னுடைய அருமையான ஆட்டத்தை நிரூபித்துக் காட்டி 35 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் சேர்த்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரிஷப் பண்ட் 6 தினேஷ் கார்த்திக் 6 ஏமாற்றமளித்து செல்ல ஹர்திக் பாண்டியா 21 பந்துகளை சந்தித்து 31 ரன்களை சேர்த்தார். தென்ஆப்பிரிக்காவின் சார்பாக டிவைன் பிரிட்டோரியஸ் மிகவும் சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

பந்துவீச்சில் ஹாஸ்டல் மிகவும் அற்புதமாக செயல்பட்டு 25 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். சாஹல் இதுவரை நடந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை. அவர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .தென்ஆப்பிரிக்காவில் ஹென்ரிச் கிளாசன் அதிகபட்சமாக 29 ரன்களை சேர்த்தார். கடந்த 15 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் 2வது தோல்வி இது என சொல்லப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் எந்த விதமான ஆதாரமும் தெரியவில்லை பவர் பிளேயில் 108 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தது புவனேஸ்வர் குமார் 2 ஓவர் 72 என்று மிகப் பிரமாதமாக வீசிக்கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட் அவரை திடீரென்று கட் செய்தார். ரிஷப் பண்ட்க்கு இது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது என சொல்கிறார்கள். யாராவது நன்றாக பந்து வீசினால் அவரை கட் செய்வது என்று சொல்லப்படுகிறது.

எந்தவிதமான ஆரவாரமில்லாத தென்ஆப்பிரிக்க அணியில் மிடில் ஆர்டரில் சொதப்பியது. வாண்டெர் டசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் பிரிட்டோரியஸும் அதே முறையில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.டேவிட் மில்லர் ஹர்ஷல் பட்டேலின் அபார பந்து வீச்சில் அவுட் செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் இந்த ஆரவாரமில்லாத ஆட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. டி20 போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதோடு இந்த தொடரில் இந்திய அணிக்கு இது முதல் மிகப்பெரிய வெற்றியாகும் ஆட்டநாயகன் விருதை சாஹல் தட்டிச்சென்றார்.

 மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

 மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கொரோனா  உருவானது. அதனையடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல் படுத்தி உள்ளனர். தற்போது இந்தியாவில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 20க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த ஒமைக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று  மூன்றாவது அலையாக வந்தாலும் சொல்லும்படியான பாதிப்புகள் இருக்காது என்று கூறி உள்ளனர். தற்பொழுது கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருக்கிறது. அதனால் பல மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். மக்கள் கூட்டம் கூடுவது நாள் பெருவாரியாக தொற்று பரவல் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த லக்னோவில் தற்போது 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.

இந்த தடை உத்தரவானது  ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்றும் விதிகள் போடப்பட்டுள்ளது.தற்பொழுது லக்னோவில் தேர்வுகள் வரவுள்ளது. அந்த  தேர்வுகளில் சமூகவிரோதிகள் போன்றோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது. அதனையெல்லாம் தடுக்க யுபிசிஎஸ், பிஎஸ்சி அல்லது அரசு தொடர்பான தேர்வு மையங்களில் போலீஸ் படை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

சாம்சங் கேலக்ஸி ஏ 22 5ஜி இந்தியாவில் அறிமுகம்!! ரியல் டைம் கேமிங்க்கு சூப்பரான போன்!!

Samsung Galaxy A22 5G launched in India Great phone for real time gaming !!

சாம்சங் கேலக்ஸி ஏ 22 5ஜி இந்தியாவில் அறிமுகம்!! ரியல் டைம் கேமிங்க்கு சூப்பரான போன்!!

சாம்சங், இந்த வார தொடக்கத்தில், கேலக்ஸி எம் 21 2021 எடிசன்  ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.12,499 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. அமேசான் இந்தியா வழியாக ஜூலை 26 முதல் இந்த தொலைபேசி நாட்டில் விற்பனைக்கு வரும். இப்போது, ​​இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கேலக்ஸி ஏ 22 5ஜி ஸ்மார்ட்போனை ஜூலை 23 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக சாம்சங் அறிவித்துள்ளது. இந்த செய்தி சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கின் வெளியானது. சாம்சங் கேலக்ஸி ஏ 22 5ஜி இந்தியாவில்  தொடங்கும் . மேலும், இது ரியல்மி நர்சோ 30 5 ஜி (ரூ.15,999 )மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஜி (ரூ.  22,999 )ஆகியவற்றுடன் போட்டியிடும். “இந்த 5G மொபைல்  இல் பின்னடைவு இல்லாத, ரியல் டைம்  கேமிங்கிற்கு உதவும். 11 பேண்ட் 5 ஜி நெட்வொர்க் ஆதரவு தடையின்றி 5 ஜி அணுகலை உறுதி செய்யும்.

இந்த செய்தியை ”இந்நிறுவனம் ட்விட்டர் பதிவில் ஒரு வீடியோவுடன் பகிர்ந்து கொண்டது. இது வரவிருக்கும் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைப் பற்றிய ஒரு காட்சியை நமக்கு வழங்குகிறது.                                  சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்பெக்ஸ்:                                                                                              சாம்சங் ஏற்கனவே கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற விவரக்குறிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி ஏ 22 5 ஜி 6.6 இன்ச் புல் எச்டி + டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 700 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்பு இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும்  இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 1 டிபி வரை மேலும் உன்னிப்பான சத்தங்களை கேட்க்க  முடியும்.

இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களைப் பொறுத்தவரை, இது முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இது வாட்டர் டிராப் உச்சியில் உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. சாம்சங் இந்தியா தனது வரவிருக்கும் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போனின் விலையை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் தொலைபேசியின் 6 ஜிபி + 128 ஜிபி எடிசன், ரூ19,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி எடிசன்  தொலைபேசியின் விலை, ரூ. 21,999 யில்  இந்தியாவில் விற்கப்படலாம் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!   

Do you cry during treatment? Comforting cinema celebrities !!

சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!

பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு வருவது அவரின் படபட பேச்சும் எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் முகமும் தான். அவரை ஜீ தொலைக்கசியின் செல்லப் பிள்ளை மற்றும் அச்சுமா என அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தற்போது கொரோனா முதல் அலை முடிந்ததும் விஜய் டிவியில் வருடம் தோறும் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று மேலும் மக்கள் மனதை கவர்ந்தார். அவர் அந்த நிகழ்ச்சியில் அன்புதான் முக்கியம், அன்பிற்கு அடிமை ஆகாத மக்களே இல்லை, அன்பு தான் ஜெயிக்கும் என்று பல ரகளைகளையும் செய்தார். அந்த ஒரு வரத்தையை வைத்து நெட்டிசன்கள் பல மீம்களையும், ட்ரோல்கலை உருவாக்கினர்.

சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். ஒரு தொலைக்காட்சி மக்கள் மனதில் நிலைக்க காரம் அந்த தொலைக்கட்சியின் பிரபலங்கள் தான்.

தற்போது 2 நாட்களுக்கு முன்பு விஜய் தொலக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தனக்கு தலையில் கட்டி உள்ளதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப் போவதகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அந்த சிகிசைச்யில் அவருக்கு தலையில் பகங்கரமாக வலி ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். அந்த தகவலுக்கு, நாங்க எல்லோரும் இருக்கோம் நீங்க கவலை படத்திங்க அச்சுமா, கடவுள் சாய் ராம் இருக்காரு உங்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியா முடிஞ்சதுன்னு கேள்வி பட்டேன். அறுவை சிகிச்சையின் போது அழுதீர்கள் என்றும் கேள்வி பட்டேன். நீங்க அழாதிங்க உங்களுக்கு செட் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து வீடு திருபுவீர்கள் என நடிகர் மனோபாலா கூறியுள்ளார்.

ஆன்லைன் வகுப்புக்கு எதிராகத் திரும்பிய தேசிய மனித உரிமை ஆணையம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் ,ஆன்லைன் வகுப்பு கவனிக்க செல்போனை அவனது பெற்றோர்களிடம் கேட்டான். குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதால் அச்சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பல மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்கி தரக்கோரியுள்ளனர்.பெற்றோர்  மறுப்பதால் மாணவர்கள் மன உளைச்சலாலும்,தாழ்வுமனப்பான்மையாலும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து குற்றச்சாட்டு வந்துள்ளது.
இந்த ஆன்லைன் கல்வித்திட்டத்திற்கு  எதிராக பலருமுள்ள நிலையில், தற்பொழுது தேசிய மனித உரிமை ஆணையமும் இதனை தடுக்க முன்வந்துள்ளது.இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.