தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!!

0
40
#image_title

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!!

நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம்.

பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் எதிர்கால வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாகவும், கேள்வி குறியானதாகவும் மாறிவிடும். இதை மனதில் வைத்துக் கொண்டு எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். ஒரு முறை கடன் வாங்கி விட்டாலே வாழ்வில் நிம்மதியை இழந்து விடுவோம். அந்த கடனை திருப்பி செலுத்தும் வரை பலருக்கு தூக்கம் இருக்காது.

இந்த கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது. நமக்கு செல்வ செழிப்பான வாழக்கையை கொடுப்பது மகா லட்சமி தாயார் தான். அவர் அருள் நமக்கும் நம் வீட்டிற்கும் கிடைத்தால் மட்டுமே பணக் கஷ்டம் நீங்கி பணம் பெருகும்.
பொதுவாக மகாலட்சுமி தாயார் வாசனை நிறைந்த பொருட்களில் குடியிருப்பார் என்பது ஐதீகம். அதன்படி அதிக வாசனை நிறைந்த பொருட்களான சோம்பு, துளசி, வெற்றிலை, திருநீற்றுப்பச்சிலை உள்ளிட்டவைகளை வீட்டு பணப்பெட்டியில் வைப்பதினால் கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெரும்.

அந்த வகையில் பச்சை கற்பூரத்தை வீட்டு பணப்பெட்டி, பர்ஸ் உள்ளிட்டவாய்களில் வைத்தால்
கடன் பிரச்சனை நீங்கும். பச்சைக் கற்பூரத்திற்கு பொதுவாகவே பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் இருக்கிறது. இந்த பச்சை கற்பூரம் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருளாகும். இந்த பச்சை கற்பூரத்தை வைத்து பரிகாரம் செய்தால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் விரைவில் நிறைவேறும்.

கடன் பிரச்சனை நீங்கி பணம் பெருக பச்சை கற்பூரப் பரிகாரம் செய்வது எப்படி?

இந்த பரிகாரத்தை வெள்ளி அன்று மட்டும் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன் வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனால் வியாழன் அன்று வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து கொள்ளவும். வெள்ளி அதிகாலையில் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.

பின்னர் சிவப்பு நிற பட்டு துணி ஒன்றை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை சேர்த்து கொள்ளவும். இதை மூட்டைக் கட்டி பூஜை அறையில் உள்ள லட்சுமி தாயாரின் படத்திற்கு முன் வைத்து கடன் பிரச்சனை நீங்க வேண்டுமென்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

பின்னர் பூஜையை முடித்து பச்சை கற்பூர மூட்டையை வீட்டில் பணம் இருக்கும் இடத்தில் வைக்கவும். இந்த பச்சை கற்பூரத்தை வாரத்திற்கு ஒருமுறை மாற்றி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் பணம் செல்வம் பெருகத் தொடங்கும்.