ஒரே நாளில் அனைத்து வெள்ளை முடிகளும் கருமையாக மாற இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள்!!

0
26
#image_title

ஒரே நாளில் அனைத்து வெள்ளை முடிகளும் கருமையாக மாற இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள்!!

நவீன காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளநரை. இந்த நரையை கருப்பாக மாற்ற பெரும்பாலனோர் கண்ட ரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு தடவி வருகின்றனர். இதனால் வெள்ளை முடி தற்காலிகமாக தென்படாமல் இருக்குமே தவிர அவை நிரந்தர தீர்வாக இருக்காது.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தால்

*முறையற்ற தூக்கம்

இந்த இளநரை பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண இயற்கை முறையில் டை செய்து தலைக்கு பயன்படுத்துவது நல்லது.

இயற்கை டை தயாரிக்கும் முறை…

தேவையான பொருட்கள்:-

*கரிசலாங்கண்ணி பொடி – 1 தேக்கரண்டி

*மருதாணி பொடி – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1/2 கைப்பிடி அளவு

*செம்பருத்தி பூ – 6

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*பச்சை கற்பூரம் – சிறு துண்டு

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் கரிசலாங்கண்ணி பொடி, மருதாணி பொடி, கருவேப்பிலை, செம்பருத்தி பூ, வெந்தயம், பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
மைய்ய அரைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு பவுலில் அவற்றை ஊற்றி கொள்ளவும். இந்த இயற்கை ஹேர் டையை தலை முடியின் வேர்ப் பகுதியில் தடவி ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீகைக்காய் பயன்படுத்தி தலையை நன்கு அலச வேண்டும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தலைக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் தலையில் உள்ள இளநரை அனைத்தும் கருப்பாக மாறிவிடும். அதேபோல் இளநரை பாதிப்புக்கு முழுமையான நிரந்தர தீர்வு கிடைத்து விடும்.