Home Health Tips தினமும் காலையில் சீரகம் ஊறவைத்த தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

தினமும் காலையில் சீரகம் ஊறவைத்த தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

0
தினமும் காலையில் சீரகம் ஊறவைத்த தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!
#image_title

தினமும் காலையில் சீரகம் ஊறவைத்த தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

நம் தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

சீரகம் ஊறவைத்த தண்ணீரை பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்:-

*முந்தின நாள் இரவு 1 கிளாஸ் தண்ணீரில் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தோம் என்றால்
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.

*தினமும் சீரகம் ஊறவைத்த தண்ணீரை பருகுவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு சரியாகும்.

*சீரக தண்ணீரில் அதிகளவு கால்சியம்,பொட்டாசியம்,மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இவை நம் சருமத்தின் புத்துணர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

*மலசிக்கல் பாதிப்பு மற்றும் செரிமானக் கோளாறு இருப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை பருகுவதன் மூலம் உரிய தீர்வு கிடைக்கும்.

*சீரகத் தண்ணீரில் அதிகளவு வைட்டமின் ஈ இருப்பதால் இவை இளமை தோற்றத்தை பாதுகாக்கிறது.

*தினமும் சீர்கத் தண்ணீர் பருகுவதால் உடலில் இரத்தத்தின் அளவு கட்டுக்குள் இருக்கும்.அதேபோல் நீரிழிவு பாதிப்பு குணமாகும்.

*சீரகத் தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதோடு குடல் புற்றுநோய் வரமால் தடுக்கிறது.

*வாயுத்தொல்லை இருப்பவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 தேக்கரண்டி அளவு சீரகம் சேர்த்து ஊறவைத்து குடித்தால் அந்த பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.

*தலைசுற்றல் ஏற்படும் பொழுது சிறிதளவு சீரகத்தை எடுத்து தண்ணீரில் கலந்து பருகினால் உடனடியாக சரியாகி விடும்.

*உடலில் அதிகளவு பித்தம் இருப்பவர்கள் சீரகம் ஊறவைத்த தண்ணீரை பருகுவதினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.