மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் புதிய நடைமுறை அமல்!! தேர்வு இயக்ககம் அறிவிப்பு!!

0
69

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது.

மேலும், இந்த நிலையில் மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணியானது சிறிது நாட்களுக்கு முன் முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 19.7.2021 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மேலும், மாணவர்களுக்கு முந்தைய வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாணவர்கள் உயர்கல்வியில் எளிய முறையில் சேர மதிப்பெண் கணக்கீட்டில் புதிய நடைமுறையை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிமுகம் செய்து உள்ளது.

இதனை தொடர்ந்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தசம எண்ணின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது. எடுத்துக்காட்டாக, 12ஆம் வகுப்பு கணக்கு பாடத்தில் ஒரு மாணவரின் முந்தைய மதிப்பெண்களின் சராசரி 98.67 ஆக இருந்தால் அந்த மாணவர்களுக்கு 99 என்று மதிப்பெண் வழங்காமல், 98.67 ஆக மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக உயர்கல்வியில் கட்டாஃப் கணக்கிடும் போது மாணவர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்க இந்த புதிய நடைமுறை அமல்படுத்த உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மதிப்பெண்களுக்காக மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

author avatar
Jayachithra