இதை குடித்தால் 5 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வருவது கன்பார்ம்!

0
349
#image_title

இதை குடித்தால் 5 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வருவது கன்பார்ம்!

உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உறக்கத்தின் போது தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும். ஆனால் மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளால் பலர் இரவு தூக்கத்தை இழந்து விட்டனர்.

எனவே இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் நிச்சயம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தீர்வு 01:-

*தண்ணீர்
*சின்ன வெங்காயம்
*இந்துப்பு

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 3 நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு அதில் சிறிது சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்து கலந்து பருகவும். இதை இரவு உறக்கத்திற்கு முன்பு குடிக்கவும். இவ்வாறு குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

தீர்வு 02:-

*கசகசா
*பால்

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு கசகசா சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து ஊறவைத்துள்ள கசகசாவை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும். கசகசா ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்க கூடியது.

தீர்வு 03:-

*பால்
*பூண்டு
*மிளகு
*மஞ்சள்

பாத்திரத்தில் 1 கிளாஸ் பால், 1 பல் இடித்த பூண்டு, 2 இடித்த மிளகு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சவும். பிறகு இதை ஒரு கிளாஸில் வடிகட்டி இரவு தூக்கத்திற்கு முன்பு பருகவும். இந்த பூண்டு பால் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.