டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகள்! மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகள்! மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி முதனிலை தேர்வில் குளறுபடிகள்: முதன்மை தேர்வுக்கு 1:50 விகிதத்தில் அனுமதிக்க வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம், டி.என்.பி.எஸ்.சி, நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல விடைகள் தவறாக உள்ளன. முதல் தொகுதி போட்டித் தேர்வுகளில் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

DMK MK Stalin-Latest Tamil News

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது, ” ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் … Read more

மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு 

Electricity

மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மழைக் காலங்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு நிகழும் இந்த விபத்துகளால் அவ்வப்போது மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க மின் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual … Read more

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்குங்கள் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், … Read more

சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து! 2 பேர் பலி

Dead

Tamil குளித்தலை அருகே கன்னிமார் பாளையம் பிரிவு சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மரம் வெட்டும் கூலி தொழிலாளி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டி மகன் வடிவேல் (39), வையாபுரி மகன் சின்னதுரை (35). இவர்கள் இருவரும் மரம் வெட்டும் கூலி வேலை செய்து … Read more

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம்

Extension of the hill road from Pollachi Azhiyar to Valparai by aerial survey method

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம் பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை விரிவாக்கம் செய்ய பணி நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , … Read more

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார்

palacode-karimangalam-kutga-container-seized

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார் ரகசிய அறை அமைத்து காரிமங்கலம் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2-டன் குட்காவை காரிமங்கலம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெங்களூர் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் கடத்துவதாக தர்மபுரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது. இதன் … Read more

போலீஸ் வாகனத்தை எடுத்துச்சென்று வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த கும்பல்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 

Police Vehicle

போலீஸ் வாகனத்தை எடுத்துச்சென்று வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த கும்பல்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள வொர்க் ஷாப்பில் பழுதுபார்க்க விட்டிருந்த போலீஸ் வாகனத்தை மூன்றுபேர் கொண்ட கும்பல் எடுத்துச்சென்று கருங்கல் பகுதியில் போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கருங்கல் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலையத்தில் உள்ள போலீஸ் வாகனம் பழுது … Read more

வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி

Vaniyambadi

வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் உண்டியல், கோவில் மீது வைக்கப்பட்டிருந்த கலசம் மூன்றாவது முறையாக கொள்ளையடிக்க  முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொள்ளையடித்த கலசத்தை கொள்ளையர்கள் அங்கேயே வீசி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சாலை ஓரத்தில் உள்ள திருப்பதி கங்கை அம்மன் ஆலயத்தின் உண்டியல், கோவில் மீது வைக்கப்பட்டிருந்த கலசத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க … Read more

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

Dead

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் (36) போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புழல் விசாரணை … Read more