சீன ஊடகம் இந்தியாவை பற்றி கூறிய அதிர்ச்சி தகவல்

சீன ஊடகம் இந்தியாவை பற்றி கூறிய அதிர்ச்சி தகவல்

சீன எல்லைப் படைகள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா போட்டியில் ஈடுபட விரும்பினால், இந்தியாவை விட சீனாவிடம் அதிகமான கருவிகள் மற்றும் திறன்கள் உள்ளன. இந்தியா இராணுவ மோதலை விரும்பினால், சீன இராணுவம் 1962-ல் செய்ததை விட இந்திய இராணுவம் மிகவும் கடுமையான இழப்புகளை சந்திக்க வைக்கும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. அணு ஆயுத நாடுகளான இந்தியா-சீனா இடையே ஒரு புதிய எல்லை பிரச்சினை … Read more

மக்கள் ஆபத்தில் இருக்கும்போது மன்னர் இப்படி செய்யலாமா

மக்கள் ஆபத்தில் இருக்கும்போது மன்னர் இப்படி செய்யலாமா

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.  ஆனால் அந்நாட்டு மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதுபற்றி கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளார். 68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். மன்னரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டு … Read more

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய … Read more

தமிழகத்தில் மேலும் 5928 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் மேலும் 5928 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 96 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,031 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

எங்களுக்கு போரை தூண்ட எந்த எண்ணமும் இல்லை

எங்களுக்கு போரை தூண்ட எந்த எண்ணமும் இல்லை

பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா ராணுவம்  மறுத்து உள்ளது. நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், சீனா ஒருபோதும் எந்தவொரு போரையும் மோதலையும் தூண்டவில்லை, சீன ராணுவம்  ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கிலுள்ள … Read more

வடகொரிய அதிபரின் சகோதரி மர்மம்

வடகொரிய அதிபரின் சகோதரி மர்மம்

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சகோதரியான கிம் யோ ஜாங் பற்றிய பேச்சுகள் தான் அதிகம் வந்தன. ஏனெனில் கிம் ஜாங் உன்னிற்கு பிறகு இவர் தான், வடகொரியாவை வழி நடத்த தகுதியானவர், இவருக்கு தான் கிம் முன்னுரிமை கொடுப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு, கிம் ஜாங் உன் மன அழுத்ததில் இருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் தன் சகோதரிக்கு தேவையான அதிகாரத்தை ஒப்படைத்துள்ளதாக உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், … Read more

சென்னை அணி வீரர்களுக்கு 3-ம் கட்ட பரிசோதனை

சென்னை அணி வீரர்களுக்கு 3-ம் கட்ட பரிசோதனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த சென்னை அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஆகியோருக்கு 3-ம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் வீரர்கள் இருவரும் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் எனத் தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற வீரர்களும் கூடுதலாக ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது … Read more

ராஜபாளையம் – குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

ராஜபாளையம் - குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

ராஜபாளையம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் அதிக அளவு கொண்டது அரிசி தான். அதனால் பல இடங்களில் ரேஷன் அரிசியை கடத்தி அதிக விலைக்கு விற்கும் சம்பவங்கள் … Read more

ரஷ்யாவில் இத்தனை லட்சத்தை தாண்டியதா கொரோனா?

ரஷ்யாவில் இத்தனை லட்சத்தை தாண்டியதா கொரோனா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

அமீரகத்தில் இந்த மூன்று இடங்களில் போட்டி நடைபெறும்?

அமீரகத்தில் இந்த மூன்று இடங்களில் போட்டி நடைபெறும்?

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடரை இப்போதைக்கு இந்தியாவில் நடத்த முடியாது. அதனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது இதற்காக எட்டு அணி வீரர்களும் ஏற்கனவே துபாய்க்கு சென்று விட்டனர். அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more