பெண்களுக்கு ஏற்படும் இரத்த மார்பகப் புற்றுநோய்!!! இதை தடுக்க சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

0
39
#image_title

பெண்களுக்கு ஏற்படும் இரத்த மார்பகப் புற்றுநோய்!!! இதை தடுக்க சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை தடுப்பதற்கு உண்டான சில இயற்கையான மற்றும் எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கு ஏற்படக் கூடிய புற்று நோய் ஆகும். மார்பகத்தில் கட்டி வருவது, மார்பகத்தில் மாற்றம் ஏற்படுவது, தோலில் குழிவு ஏற்படுவது, மார்பக முலைகாம்பில் இருந்து திரவம் வடிவது ஆகியவை மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

மார்பகப் புற்றுநோய் தடுக்க சில எளிமையான டிப்ஸ்…

* பெண்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். மாதவிடாய் ஏற்படுவது நின்றான் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும். அதனால் உடல் எடையை எப்படியாவது குறைத்துவிட வேண்டும்.

* மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். பெண்கள் 30 வயதை கடந்தாலே தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இவ்வாறு தினமும் உடற்பயிற்சி செய்வதால மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது 10 சதவீதம் குறைகின்றது.

* மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பு வகைகள், கறுப்பு நிறைந்த உணவுகள், பானங்கள் இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மாமிசத்தில் மீன், சிக்கன் சேர்த்துக் கொள்ளலாம்.

* மதுப்பழக்கம் உள்ள பெண்கள் கட்டாயம் மது அருந்துவது தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு மது முக்கிய காரணம் ஆகும். எனவே பெண்கள் மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும்.

* அதே போல புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் அனைவரும் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட வேண்டும். புகைப் பிடிக்கும் பழக்கத்தால் இன்னும் விரைவாக மார்பகப் புற்றுநோய் பெண்களை தாக்கும்.

* மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்வதை தடுக்க வேண்டும். ஏனென்றால் ஹார்மோன் சிகிச்சை எடுக்கும் பொழுது உடலில் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகின்றது. இதனால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும்.

* குழந்தைகள் பிறந்த பின்னர் எவ்வளவு காலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மடியுமோ அவ்வளவு நாள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனென்றால் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

* மிகவும் இறுக்கமாக உள்ள பிராக்களை அணியக்கூடாது. அதே போல அசௌகரியமாக இருக்கும் பிராக்களை அணியக்கூடாது. சரியான அளவுள்ள பிராக்களை அணிவது நல்லது.