திங்கட்கிழமை, மே 6, 2024
Home Blog Page 4721

கார் வெடித்ததால் முதல்வரின் திட்டம் பின்னடைவு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

0

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயு க்களை தடுக்கவும் ஐ. நா அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மின்சார ரக வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன் பேரில் நமது மத்திய அரசும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது முதல்வர் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மாடல் மின்சார ரக காரை அறிமுக படுத்தினார்.

இந்த ரக காரை கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒருவர் வாங்கியுள்ளார். அவரது வாகன நிறுத்தத்தில் இருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த சமயத்தில் காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட மின்சார கசிவினால் கார் வெடித்திருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துமாறு அரசாங்கம் கூறிவருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்கி காரை மேம்படுத்த வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஜெகன் மோகன் ரெட்டி சூப்பர்! அருமையான திட்டம் மக்கள் மகிழ்ச்சி! பள்ளி முதலாளிகளுக்கு ஷாக்!

0

சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்தது புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவர் ஏற்றவுடன் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஆந்திர மக்களிடையே பெரிதும் மதிப்பை பெற்று வருகிறார்.

ஆந்திராவில் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளர்.
நேற்று ஆந்திர சட்டசபையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க இந்த மசோதா பயன்படும் என தெரிவித்தார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கமிஷன், பள்ளிகளின் கட்டணம் மற்றும் கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக தனியாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

இந்த மசோதா குறித்து விரிவாக சட்டமன்றத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பல எம்.எல்.ஏ-களும் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜெகன் மோகன், அந்த பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், இது போன்ற கல்வி கொள்ளையை தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

0

இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் போட்டியிட்டது. படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.

பின்பு காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாதது அக்கட்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். சான்றாக நேற்று காங்கிரஸ் கட்சியின் MP சஞ்சய் சிங் கட்சியிலிருந்து விலகினார்.

விலகிய பின்னர் அவர் கூறியது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் காங்கிரஸ் தலைமை இல்லாமல் திண்டாடிகொண்டு இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.

மேலும் படிக்க : அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

இன்று காங்கிரஸ் கட்சியின் பொது குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைமை யார் என்பதை முடிவு செய்யும் என எதிர்பார்க்க படுகிறது.

டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பொது குழு இடைக்கால தலைமை முடிவு செய்யபடும். இதற்கு சச்சின் பைலட் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.

யார் தலைமை பொறுப்பை ஏற்பார் என்பதை பொறுத்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

0

அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

சட்டங்கள் உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர்களே அந்த சட்டத்தை எதிர்க்கும் சந்தர்ப்பவாத அரசியலின் மூலம் திமுகவின் இரட்டை வேடத்தை விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தேசிய புலனாய்வு முகமை: இஸ்லாமியர் நலனும், திமுகவின் இரட்டை வேடமும்! என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில்

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், அதை திமுக கண்டிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவதற்கு எடுத்துக்காட்டு இது தான் என்று கூறும் அளவுக்கு தான் ஸ்டாலினின் கருத்து அமைந்திருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் சட்டங்களும், அவற்றின் மூலம் அமைக்கப்பட்ட அமைப்புகளும் பல தருணங்களில் தவறாக பயன்படுத்தப்படுள்ளன என்பதையும், அரசியல் பழிவாங்கும் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஆனால், அத்தகைய சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்படுவதற்கும், அதில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்தவர்களே, அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பது தான் சந்தர்ப்பவாத அரசியலின் சிகரம் ஆகும்.

‘‘தமிழகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு என்று தனியாக ஒரு பிரிவு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருக்கிறது. அதற்கு டி.ஐ.ஜி தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணை பிரிவுகளும் இருக்கின்றன. ‘‘க்யூ பிராஞ்ச்’’ என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரிவு மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது மட்டுமின்றி – மாண்புமிகு முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி- தேசியப் புலனாய்வு முகமையை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது’’ என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மதத்தின் அடிப்படையில் ஒருவரின் செயல்களை தீர்மானிக்கக்கூடாது; தவறு செய்யாத அப்பாவிகள் யாரும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தண்டிக்கப்படக்கூடாது; அதேநேரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனால், தமிழ்நாட்டுக்குள் தேசிய புலனாய்வு முகமை நுழைவதற்கு தடம் அமைத்துக் கொடுத்தது யார்? திமுக தானே… அதை மு.க.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா?

தேசிய புலனாய்வு முகமை 2009-ஆம் ஆண்டில் தான் அமைக்கப்பட்டது. அதற்காக 2008-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விசாரணை நடத்தும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த சட்டத்தை இயற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுகவும் அங்கம் வகித்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை திமுக முழுமையாக ஆதரித்தது. அதுமட்டுமின்றி, அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் தான் துணை முதலமைச்சராக இருந்தார். அவரது தந்தை கலைஞர் தான் முதலமைச்சராக இருந்தார். இப்போது மு.க.ஸ்டாலின் கூறும் ‘‘க்யூ’’ பிரிவு காவல்துறை, அப்போது கலைஞர் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ‘‘க்யூ’’ பிரிவு காவல்துறையை மீறி தேசிய புலனாய்வு முகமை தமிழகத்திற்குள்ளும் நுழைந்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறித்து அப்போது யாரும் வாயைத் திறக்கவில்லை. இப்போது தான் திமுகவுக்கு இதில் ஞானம் பிறந்திருக்கிறது போலும்.

அதுமட்டுமன்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் நான்கு திருத்தங்களை செய்வதற்காக சட்ட முன்வடிவு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த சட்டத்திருத்தங்களை திமுக முழுமையாக ஆதரித்தது. அத்துடன் நிற்காமல் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற கொறடா மூலம் விளக்கமளித்த திமுக,‘‘தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட நான்கு திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை என்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை’’ என்று கூறி வக்காலத்து வாங்கியது. திமுகவின் இந்த நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதற்கெல்லாம் மேலாக,‘‘ஏதோ இந்த சட்டம் புதிதாக இப்போதுதான் கொண்டு வரப்படுவது போலவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போலவும், சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகளை மறுக்கும் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது போலவும், கொடூரமான வரம்பற்ற அதிகாரங்கள் காவல் அதிகாரிகளுக்கு புதிதாக அளிக்கப்பட்டுள்ளது போலவும், இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேண்டுமென்றே திரித்து செய்திகளை பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்றும் திமுக கூறியிருந்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்துக்கு ஆளுங்கட்சியை விட தீவிரமாக வக்காலத்து வாங்கிய திமுக, இப்போது அதை எதிர்ப்பது போல நாடகமாடுவது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் செயலுக்கு ஒப்பானதாகும். வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் பறிபோய்விடுமே? என்ற பதட்டம் தான் இதற்கெல்லாம் காரணமாகும்.

மேலும் படிக்க : சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

திமுகவின் இயல்பே இரட்டை வேடம் தான் என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு புரியும். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டு, ஆட்சியை இழந்தவுடன் அதை கடுமையாக எதிர்ப்பது, மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, ஆட்சியை இழந்த பின் அதை கடுமையாக எதிர்ப்பது போன்றவை திமுகவின் அரசியல் பித்தலாட்டங்கள். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டதால், எப்போதுமே அவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கும் திமுகவுக்கு இனி வரும் தேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்டப்போவது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

0

அமைச்சர் சர்ச்சை பேச்சு! அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

நீங்க இப்போதான் ரௌடி! நாங்க அப்போவே ரௌடி தான்! என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலூர் தேர்தல் பொது கூட்டத்தில் சர்ச்சையாக பேசியுள்ளார்.

நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி மட்டும் நிறுத்திவைக்கபட்டது. திமுக கட்சியினர் பணபட்டுவாட செய்ய பணம் பதுக்கி வைத்திருந்ததாக பணம் பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. பின்பு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி மறு தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தரப்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கூட்டணி கட்சி ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இது தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளும் மாறிமாறி குறைகூறுகின்றனர். இதை தொடர்ந்து, நேற்று அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது,

எம்.ஜி. ஆர் அதிமுக தலைமையில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அப்பொழுது அதிமுகவில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். பின்பு அம்மா ஜெயலலிதா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு 17 லட்சம் தொண்டர்களை, 1.50 கோடி லட்சம் தொண்டர்களாக உருவாக்கினார்.

அம்மாவின் ஆதரவில் மக்களின் குறைகளை தேடி தேடி நிவர்த்தி செய்து வருகிறோம். திமுக வெறும் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெறுகிறது. திமுக எங்களை குறைகூறுவதை வேடிக்கை தனமாக உள்ளது.

மேலும் படிக்க : சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

திமுக கட்சி இப்போதுதான் ரௌடி , ஆனால் நாங்கள் பிறப்பில் இருந்தே ரௌடிகள். அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி கண்ணசைத்தால் திமுக கட்சியே இருக்காது என்று சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார்.

மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வேலூர் தொகுதி! திமுக வெற்றி உறுதி? அதிமுகவே காரணம், சோகத்தில் OPS, EPS?

0

திமுகவின் வெற்றி உறுதி ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு அதிமுக விடை அளித்துவிட்டதாக திமுக தரப்பில் கட்சியினர் கூறுகின்றனர். வெற்றிக்கு காரணம் ஓ.பி.எஸ் மகன் ரவீந்தரநாத் தான் காரணம் எனவும் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் செய்தார் MP ரவீந்தரநாத்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக வெற்றி உறுதி என திமுகவினர் கூற காரணம் என்னவென்றால், முத்தலாக் தடை சட்டத்திற்கு ஓ. பி.எஸ் மகன் ரவீந்தரநாத் மக்களவையில் ஆதரித்ததே காரணம் என கூறுகின்றனர். முத்தலாக் தடை சட்டத்தை கடந்த மோடி ஆட்சியின் போது நிறைவேற்ற முடியவில்லை. காரணம் பெரும்மான்மை இல்லாத நிலை தான். அதனால் முத்தலாக் தடை சட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்பு மீண்டும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் அந்த சட்டத்தை ஏற்ற பிஜேபி முனைப்பு காட்டியது.

மக்களவையில் தற்போது பிஜேபிக்கு பெரும்மான்மை இருப்பதால் இந்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஆதரவு கோரிய பொழுது அதிமுகவின் ரவீந்திரநாத் மட்டும் ஆதரவு தெரிவித்தார். மீண்டும் மாநில அவையில் முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவு கோரிய பொழுது அதிமுக எதிராக வெளிநடப்பு செய்தனர்.

இருந்த போதிலும் பிஜேபி பெரும்மாண்மை உள்ளதால் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் திமுக இரண்டு அவையிலும் எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். சரி இதற்கு வேலூர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்.

வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் பகுதி ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் பெரும்பாலும் முஸ்லீம்கள் ஏறக்குறைய 4 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் பகுதி அது. முத்தலாக் தடை சட்டத்திற்கு அதிமுக ரவீந்தரநாத் மக்களவையில் ஆதரவு கொரியதால் , அந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்பதால் அதிமுகவை புறக்கணிக்க கூடும் என கூறுகின்றனர்.

இதனால் திமுக வெற்றிக்கு அதிமுக MP ரவீந்தரநாத் முக்கிய காரணம் என திமுகவினர் கூறுகின்றனர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வெற்றி யார் பக்கம் என்பதை தேர்தல் முடிந்தால் தான் தெரியும்.

மேலும் படிக்க : சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் MP விலகி BJP யில் இணைந்தார்! கலக்கத்தில் காங்கிரஸ்!

0

 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது. இதன் வெளிப்பாடாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதை தொடர்ந்து பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் சிறப்பான தலைமை இல்லாதது ஒரு காரணம் என்றே சொல்லலாம். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் மற்றும் மூத்த தலைவரும் ஆவார். இவரின் விலகல் காங்கிரஸ் கட்சியில் பெரிதும் சர்ச்சையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரை தொடர்ந்து அவரது மனைவி அமிதாவும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று விலகி உள்ள நிலையில் இன்று அவர்கள் பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.
தனது ராஜினாமா குறித்து சஞ்சய் சிங் கூறுகையில், எங்களுக்கு காந்தி குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த உறவுகளில் எந்த இடையூறும் இல்லை என்று கூறியுள்ளார்.

விலகளின் காரணம் பற்றி சஞ்சய் சிங் கூறும்போது, நான் நாற்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தேன் எனது பணி சீரும் சிறப்புமாக இருந்தது. ஆனால் கடந்த 15-20 ஆண்டுகளாக கட்சியில் நிலவி வரும் சூழல், கட்சியில் சரியான வழிநடத்த தலைமை இல்லை இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை.

மேலும் சஞ்சய் சிங் கூறும்போது, நானும் எனது மனைவியும் மக்களவையில் இரண்டு முறையும், மாநிலங்களவையில் இரண்டு முறையும் பணியாற்றி இருக்கிறோம். எங்களது ராஜினாமா முடிவு 1-2 நாட்களில் எடுத்த முடிவு அல்ல நீண்ட காலம் யோசித்து எடுத்த முடிவு என சஞ்சய் சிங் விளக்கம் அளித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் மேலே குறிப்பிட்டது போல காங்கிரஸ் கட்சியில் சரியான தகவல் தொடர்பு இல்லை, ஒருங்கிணைப்பு இல்லை, தலைமை காலியாகவும் உள்ளது. கட்சியில் பல வேறுபாடுகள் நிலவி வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த காலத்தில் கட்சி சிறப்பாக இயங்கி வந்தது. நாளை என்ன ஆகும், கட்சி என்ன நிலையில் இருக்கும் என்பது தெரியாமல் செயல்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறத்தில், இரண்டாவது முறை பதவி ஏற்ற பிரதமர் மோடி அனைவருடனும் அனைவரின் வளர்ச்சி நாட்டு மக்களின் எதிர்காலம் குறித்து மக்களிடையே பெரும் அளவிலான மதிப்பை பெற்று நல்ல முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

மோடி சரியான முறையில் வழிநடத்துவார். அவர் என்ன சொல்கிறாரோ, அதை செய்கிறார். என்னை பொருத்த வரை நாட்டு மக்கள் அவருடன் இருப்பதாக நான் நினைக்கிறேன், நாட்டு மக்கள் அவர்களுடன் இருப்பதால், நானும் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். அடுத்து எனது திட்டம் பிஜேபி-யில் சேருவது குறித்து இருக்கும். நாளை பாஜகவில் சேருவேன் எனவும் அவர் கூறினார்.

சஞ்சய் சிங் மற்றும் அவரது மனைவி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தற்கொலை செய்து கொண்ட கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

0

தற்கொலை செய்து கொண்ட கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.என்.கிருஷ்ணாவின் மருமகனுமான, வி.ஜி.சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து நடந்த தேடுதலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருகனும் கஃபே காபி டே நிறுவனருமான வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்தது உறுதியானது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்  எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் இந்தியா முழுவதும் கிளைகள் கொண்டுள்ள கஃபே காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார்.   இவர் கஃபே காபி டே நிறுவனம் மட்டுமல்லாமல் மேலும் சில நிறுவனங்களை சித்தார்த்தா நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு வாக்கிங் செல்வதற்காக நேத்ராவதி ஆற்றங்கரைக்கு சென்ற சித்தார்த்தா பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். இதுகுறித்து வி.ஜி.சித்தார்த்தாவின் கார் ஓட்டுநர் அளித்த தகவலின் படி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதையடுத்து  வி.ஜி.சித்தார்த்தா கஃபே காபி டே நிர்வாகத்திற்கு  எழுதிய கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலானது. அதில், ‘என் 37 ஆண்டு கடின உழைப்புக்குப் பின்னால் எந்த லாபகரமான தொழில்முறையைக் கையாள முடியவில்லை. நான் இதுவரை 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினேன். ஆனாலும் லாபகரமான தொழிலை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உங்களைக் கைவிடுகிறேன்.பங்குகள் தொடர்பான விவகாரத்தால் நமது நிறுவனத்தின் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தி வைத்தது. இதனால் எனக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட தவறுகள் மற்றும் கடன்களுக்கு நான் மட்டுமே காரணம். இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது குடும்பத்திற்கும் இது தெரியாது. என் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுங்கள்.  மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர். என்னை புரிந்துகொண்டு வருங்காலத்தில் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  இதனால் தொழிலில் ஏற்பட்ட  நஷ்டம் காரணமாக வி.ஜி.சித்தார்த்தா  தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் காவல் துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர்  நேத்ராவதி ஆற்றிலிருந்து  சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.  இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முன்னாள் முதல்வர்  எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மக்களவையில் ஆதரவு! மாநிலங்களவையில் எதிர்ப்பு! அதிமுக நிலைபாடு முத்தலாக் நிறைவேற்றம்.

0

மக்களவையில் ஆதரவு! மாநிலங்களவையில் எதிர்ப்பு! அதிமுக நிலைபாடு முத்தலாக் நிறைவேற்றம்.

கடந்த நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் இயற்ற மாநிலங்கள் அவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிஜேபி மோடி அரசிடம் பெரும்பான்மை இல்லாததால் அச்சட்டம் நிறைவேற்றாமல் இருந்தது. அதே மசோதாவை இன்றைய நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, மாநிலங்களவையிலும் இம்மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்ததை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் இம்மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, மாநிலங்களவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக, திமுகவை தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.
தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவைக்கே வராத நிலையில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், முத்தலாக் தடை மசோதாவை, நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என விவாதத்தின்போது வலியுறுத்தினர்.

இதையடுத்து, இம்மசோதாவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் நடை பெற்றது. தேர்வு குழுவுக்கு அனுப்ப 84 பேர் ஆதராகவும், 99 எம்.பி.,க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

அதாவது முத்தலாக் தடை மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பாமலேயே, மாநிலங்களவையில் நிறைவேற்ற ஆதரவாக 99 பேரும், இதனை எதிர்த்து 84 எம்.பி.,க்களும் வாக்களித்தனர். இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின் மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை சட்ட மசோதா இன்று நிறைவேறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தீவிர முயற்சியில் இதை நிறைவேற்றியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா?

0

அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா?

அனைத்திற்கும் ஒரே மருந்து !! இன்றைய மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் உடல் சோர்வு, கண் பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன் போன்றவையாகும்.

கடந்த ஐம்பது வருடகால வாழ்க்கைமுறை நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினோம் அதனால் அதன் விளைவாய் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையுடன் கூடிய உணவுபழக்கங்கள் மாற்றியதே காரணம். அனைத்தும் ரசாயனம் கொண்டு தயாராகி வருகிறது.

நோய் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது. அந்த மந்திர சொல்தான் ‘முருங்கை”. நமது உணவில் தினமும் முருங்கை கீரை, காய், பூ என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்வது அவசியம். இதில் சமைத்த முருங்கைக்காயை விட கீரை மிக நல்லது. அதையும்விட முருங்கை பூவில் எடுக்கும் தேன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இது உடல் பருமனை குறைக்கும் சக்தி கொண்டது. குழந்தை இன்மைக்கு நல்ல மருந்தாகும். உடல் வலுப்பெற ஒரு நல்ல உணவு பழக்கம் ஆகும். சக்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. கண்பார்வை குறையை நீக்கும்.

அன்று விவசாயம் சார்ந்து இயங்கிய நாம் இயல்பாகவே நல்ல உணவுபழக்கங்களை கொண்டிருந்தோம். அது மெல்ல மெல்ல நகரமயத்திற்கு சென்று காலை 9 முதல் மாலை 6 வரையிலான புதிய வேலை, வாழ்க்கைமுறை, பொருளாதாரத்தை மையப்படுத்திய வாழ்க்கை என்று மாறத்தொடங்கிய நாள்முதல் அதற்கு ஏற்றாற்போல் நமது உணவுபழக்கமும் மாறிவிட்டது.

ஆனால், இன்று மேற்கத்திய உணவுமுறை ஆதிக்கம் மற்றும் தினமும் ஒரே வகையான தோசை, பொங்கல் போன்ற உணவுகள் நமது ஆரோக்கியத்தை கெடுத்தது என்றே சொல்லலாம்.

இன்றைய வாழ்க்கை இப்படித்தான் என்பது நிதர்சனம். ஆனால், நாம் நலமுடன் வாழ வேண்டும் என்பதும் அவசியம். ஆகவே, அன்றுபோல் இயற்கையாய் அமைந்த உணவுபழக்கங்கள் போல் இல்லாமல் நாமே நமது உடலை படித்து நமக்கு ஏற்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது இயல்பான வாழ்க்கை முறையில் உணவுபழக்கம் எவ்வாறாக இருந்தாலும் தினமும் ஒரு கரண்டி இந்த முருங்கை பூ தேன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்ல பலனை தரும்.

நல்லதையே உண்போம் நலமுடன் வாழ்வோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்