புதன்கிழமை, மே 8, 2024
Home Blog Page 4722

தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு! திமுகவா? அதிமுகவா? அல்லது புதிய கட்சியா?

0

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 நேற்று நடைபெற்றது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டி ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் அதிமுகவை விமர்சனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து தொகுதியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். முதல் கட்டமாக 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன.

இந்நிலையில் தந்தி டிவி எப்பொழுதும் கருத்து கணிப்பு நடத்தி வரும் அது போல இந்த தேர்தலிலும் தேர்தல் முடிந்த பிறகு கருத்து கணிப்பு நடந்தது. அதை தொடர்ந்து, தொலைக்காட்சியில் வேலூரில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிகழ்ச்சி நேற்று இரவு ஒளிபரப்பானது. இந்தக் கருத்துக்கணிப்பில் திமுகவின் கதிர் ஆனந்த் 46 – 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 41 – 47 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள தீபலட்சுமி 4 – 7 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முந்தைய கருத்து கணிப்பு படி திமுக 48-52 எனவும் அதிமுக 43-48 எனவும் தந்தி டிவி கூறியது. தேர்தல் வெற்றி யாருக்கு என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சோயா பீன்ஸ் – இல் போதை பொருளா? மக்களே உஷார்!

0

உலகத்தில் எவ்வளவோ பகுத்தறிவு வளர்ந்தாலும் இந்த போதை பொருள் தவறு என்பதை மக்கள் உணரவில்லை. ஒரு ஆய்வின் படி உலக இறப்பு விகிதத்தில் 40% இறப்பு போதை பொருள் உபயோகிப்பதால் என அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

போதை பொருளை தடை செய்தாலும் அதை கடத்தி விற்பனை செய்வதில் கை தேர்ந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருக்க ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் துறைமுகத்தில் சரக்குப் பெட்டியில் கடத்தப்பட இருந்த 7600 கோடி ரூபாய் மதிப்புடைய கோகெய்ன் போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சோயா பீன்ஸ் என்று குறிப்பிடப்பட்ட பார்சலை அதிகாரிகள் சந்தேகம் கொண்டு சோதனையிட்டதில் உள்ளே 200 பைகளில் கோகெய்ன் பதுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மொத்த மதிப்பு 7600 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தப் போதைப் பொருள் பைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.

திரையில் போதை பொருள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என விளம்பரம் செய்தாலும் அதை பார்த்துக்கொண்டே புகை பிடிக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இதுதான் புதிய இந்தியாவின் வரைபடமா? மோடியின் ஒன் நேசன் திட்டம் நிறைவேறியதா?

0

புதிய இந்தியா என ஒரு வரைபடம் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கஷ்மீர் பிரச்சனைக்கு இன்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று கூடியது உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையில். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இதனால் புதிய இந்தியா என்ற வரைபடம் ஊடகங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இனி கஷ்மீர் இல்லையா? கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஏன் ரத்து? நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

0

தீவிரவாதி ஊடுருவல் என கஷ்மீர் மக்கள் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று கூடியது திரு அமித்ஷா தலைமையில். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது.

மத்திய காவல் படைகள் கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்பப்படும் என்ற இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை பரவத் தொடங்கியதில் இருந்து காஷ்மீர் மக்களிடையே கடந்த சில நாட்களாக அச்ச உணர்வு நிலவுகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தலைவர்கள் முதல் மக்கள் வரை வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கை நேற்று சந்தித்தார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்படப் போவது கிடையாது என்று ஆளுநர் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அமித்ஷா தலைமையில் நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய படுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனால் கஷ்மீர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திமுகவா? அதிமுகவா? வேலூர் கோட்டை யாருக்கு? கடந்து வந்த பாதை ஒரு அலசல்!

0

திமுகவா? அதிமுகவா? வேலூர் கோட்டை யாருக்கு? கடந்து வந்த பாதை ஒரு அலசல்!

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்தனர்..

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் O பன்னீர்செல்வம்  என அனைவரும் இந்த தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரத்தின் போது திமுகவை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி நாட்டிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல் எங்களை ஊழல் கட்சி என்று சொல்கிறார் ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

வாரிசு அரசியல் செய்யும் அவருக்கு என்ன தெரியும். கட்சிக்குத் தலைவராக வருவதைத் தான் நாங்கள் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்.அவருக்குப் பிறகு உதயநிதி. இவர்களை விட்டால் நாட்டில் வேறு ஆளே இல்லையா?

உதயநிதியை நான்கு படத்தில் விளம்பரத்துக்காக நடிக்கவைத்து கட்சிக்குள் நுழைத்திருக்கிறார். ஸ்டாலினை நம்பி எங்களிடமிருந்து வெளியே சென்ற 18 எம்.எல்.ஏ-க்களும் நடுத் தெருவில் நிற்கிறார்கள். 

தி.மு.க-வினர் எல்லோரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிரியாணி, பரோட்டா எல்லாம் காசு கொடுக்காமல் ஓசியில் சாப்பிடுகிறார்கள். பணம் கேட்டால், ஹோட்டல் உரிமையாளரை குத்து குத்துனு குத்துகிறார்கள். இவர்கள் எங்களை விமர்சனம் செய்வதா?

இதை தொடர்ந்து திமுகவும் அதிமுகவை விமர்சித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது நாங்கள் பொய் அறிக்கை குடுத்து வெற்றி பெற்றோம். ஆனால் நீங்க மிட்டாய் கொடுத்தா வெற்றி பெற்று இருக்கிறீர்கள். முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவு கோரியது அதிமுக அரசுதான் என்றும், ஆதிமுக பிஜேபியின் கை கூலி என்றும் விமர்சனம் செய்தார்.

இதை தொடர்ந்து இன்று வேலூர் தொகுதியில் தேர்தல் காலை தொடங்க உள்ளது. வெற்றி பெறுவது அதிமுகவா? திமுகவா? என்பது பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஹிந்தியிலும் வெல்லப்போகும் விஜய் சேதுபதி! வெற்றி படத்தின் வெற்றி தொடருமா?

0

கடந்த ஆண்டு வெளி வந்து மிகவும் வெற்றிகரமாக அனைவரையும் கவர்ந்து அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இது புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம். இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதையாலும் , விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், மாதவனின் நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றி படம் என்றாலே மற்ற மொழிகளில் படத்தை இயக்க தோன்றும். அப்படி இருக்க விக்ரம் வேதா படத்தை மற்ற மொழிகளில் இயக்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹிந்தி பதிப்பில் அமீர்கான் மற்றும் சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர்.

தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர். மாதவன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் விஜய்சேதுபதி நடித்த தாதா கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. தமிழ் தலைப்பான விக்ரம் வேதா தலைப்பே ஹிந்தியிலும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. படம் தமிழ் வெற்றி அடைந்தது போல ஹிந்தியிலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

“பிகில்” செய்த சாதனை! ரிலீசுக்கு முன்னே இத்தனை கோடி வசூலா?

0

திரையுலகின் தளபதி என அனைவராலும் அழைக்கப்படுவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் A.R.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் ஆகும். இது நல்ல வசூலையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் ஆகும். அதைத்தொடர்ந்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை விஜய் நடிப்பில் இயக்கியவர் இயக்குனர் அட்லீ ஆகும். மீண்டும் இருவரும் 3-வது முறையாக, ‘பிகில்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் A.R.ரகுமான் இசையில் வெளி வந்து நல்ல வரவேற்பு பெற்று டிவிட்டர் டிரேன்டிங்கிள் முதல் இடம் பிடித்தது. இந்த படத்தின் விநியோகம் தற்போது நடக்கிறது.

அட்லீ, விஜய் கூட்டணி என்பதால் இந்த படம் வினியோகஸ்தர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு படம் வியாபாரம் ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களின் வியாபார சாதனைகளை, ‘பிகில்’ முறியடித்து இருக்கிறது.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய திரைக்கதை கொண்டது. படம், தீபாவளி நாளில் திரைக்கு வர இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மத்தியில், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘பிகில்’ படத்தை கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

எல்லையில் பதற்றம் யார் காரணம்? இந்தியாவா? பாகிஸ்தானா? விரிவாக அறிவோம்!

0

இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் கடும் போட்டி சண்டை நிலவி வருகிறது. அப்படி இருக்க இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கட்டுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக்கு உள்ளே உள்ள அப்பாவி குடிமக்கள் மீது இந்தியா எறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா குரேஷி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போர் வெறியால் இந்தியா அமைதியை மட்டும் சீர்குலைக்கவில்லை, கட்டுப்பாட்டு மனித உரிமை மீறல்களையும் செய்கிறது என்று அவர் இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். தற்போது நிலவும் சூழலை உன்னிப்பாக கவனிக்குமாறு சர்வதேச நாடுகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயல்வதாகவும், அதற்கு ஏதுவாக இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதாகவும் கூறியுள்ள இந்திய ராணுவம், இத்தகைய சூழல்களில் பதில் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளது. என சனிக்கிழமை இரவு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

நேற்றைய போட்டியில் சாதனை! முதல் வீரர் என்ற பெருமை இவருக்கே!

0

உலககோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு இந்தியா பங்கு பெறும் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் உடனாகும். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார்.

இதையடுத்து பேட்டிங் செய்த,
வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது.96 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் ஏமாற்றமளித்தார். இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 16 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி, பிட்ச் சிறப்பானதாக இல்லை. ஆனால்,போட்டிக்கு முந்தைய நாள்களில் மழைப்பொழிவு இருந்ததால், பிட்சை இதைவிட சிறப்பானதாகப் பராமரிக்க முடியாது என்று கூறினார்.

சைனி 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  சிறப்பாகப் பந்துவீசிய சைனி, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரர் சைனி, அதை மெய்டனாக வீசினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

முஸ்லீம் என்பதால் புறக்கணித்த இந்துத்துவவாதி ! மீண்டும் சர்ச்சை!

0

சில தினங்களுக்கு முன்பு தான் சோமெட்டோ நிறுவனத்தில் உணவு வாங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல தொலைக் காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் முஸ்லிம் என்பதால் செய்தி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பின் தலைவர் அவரை பார்க்க மறுத்து தன் கண்களை மறைத்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதற்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் ஒருவர் பீட்சா உணவு கேட்டு சொமாட்டோ நிறுவன இணையத்தில் ஆர்டர் செய்து இருந்தார். இதை ஏற்ற சோமாட்டோ உணவை கொண்டு வரும் ஊழியர் பெயரையும் குறிப்பிட்டு பதிலளித்திருந்தது. 


அதில் தன் உணவை கொண்டு வருபவர் ஒரு முஸ்லிம் என அறிந்த சுக்லா, இந்து அல்லாதவர் கொண்டுவரும் உணவு எனக்கு தேவையில்லை எனவும், பணம் வாபஸ் இல்லை என்றாலும் தனது ஆர்டரை ரத்து செய்வதாகவும் கூறி விட்டார். 

இதற்கு சொமெட்டோ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அனுப்பியது, பின்வருமாறு, ’உணவிற்கு மதம் இருப்பதில்லை. அந்த உணவே ஒரு மதம் தான்.’ என பதிலளித்திருந்தது. ஆனால் இதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவருக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது ஏன் எனக்கு கொடுக்கப்படவில்லை எனவும் அந்த வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று ’ஹம் இந்து’ எனும் அமைப்பின் தலைவர் அஜய் கவுதமிற்கு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் நெறியாளர் பெயர் காலீத் என அறிந்த அஜய் கவுதம், அவரைப் பார்க்க மறுத்து தன் கண்களை கைகளால் மறைத்தபடி பேசியுள்ளார். இதற்கு அவர் தாம் முஸ்லிம் நெறியாளரை கண்களால் பார்த்து பேச முடியாது எனவும் மறுத்து உள்ளார். இதனால், அவரை மீண்டும் தம் நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை என அந்த சேனலின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்