விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் …..! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்…..!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் விஷம் கலந்த மதுவை குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் உள்பட மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் அமைந்திருக்கும் பழங்குடியினர் காலனியில் 30 குடும்பங்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை அந்த பகுதியை சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மது குடித்து உள்ளனர். அப்போது மது அருந்திய ஒருசில மணி நேரத்தில் மது அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் … Read more

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வேலியே பயிரை மேயலாமா ? காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் !!

மத்திய பிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாங்கவன் காவல் நிலையத்திக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட 20 வயது இளம்பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த பாலியல் கொடுமை கொடுத்துள்ளனர். மேலும், இதுதொடர்ந்து … Read more

குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்……! பரிதாபமாக உயிரிழந்த சோகம் …..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள வீரியம்பாளையம் ஊராட்சியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். எட்டு வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் அந்த அரளி விதையை அரைத்து தண்ணீரில் போட்டு கொடுத்துவிட்டார். அதன்பின் தண்ணீர் பிடிக்க வீட்டை விட்டு … Read more

நகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!

உதகமண்டலத்தில் (ஊட்டி) இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து ஏமாற்றியதன் காரணமாக நகைக்கடை ஊழியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஊட்டியில் இயங்கி வரும் செம்மனூர் நகைக்கடை ஒன்றில் சிறப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கிச் செல்லும் ஆஃபர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் மேலாளர் தலைமையில் நடத்தப்பட்ட  மாதாத்திர … Read more

அரசு வேலைக்கு ஆசை காட்டி.. ஆட்டைய போட்ட கும்பல்.! இளைஞர்களே உஷார்.!

பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த வாலிபர்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஒரு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தலைநகர் புதுடில்லியில் அமித் குமார், ராம் தயாள், குர்திப் ஆகிய மூன்று பேரும் இணைந்து இணையதளம் மூலமாக, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளனர். அந்த அந்த விளம்பரத்தை பார்த்த பலர் நேர்முகத் தேர்வுக்காக சென்றனர். அப்போது அந்த மோசடி கும்பல் அங்கே அந்த இளைஞர்களிடம் வைப்புத் தொகை கட்ட வேண்டும் … Read more

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத 3.25 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் என்பவர்  கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், ஓசூர், தர்மபுரி,வாணியம்பாடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியில் இடுப்பட்டுள்ளார் . அங்கு அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு! சமூக பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி மாதம்,தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.மேலும் இந்த இழப்பீடு தொகைக்கு முதல் கட்டமாக ரூ.14.96 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்றும் அந்த தொகையை கையாள்வதற்கான விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக் … Read more

தகாத உறவு.. திரும்பி வந்த மனைவி.! தலைமை காவலர் வீட்டில் உயிரிழப்பு..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தலைமைக் காவலரின் மனைவியை கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவாய் புதூர் ஊராட்சியை சேர்ந்தவர் சின்னத்துரை இவர் மத்திகிரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சின்னதுரையின் மனைவி செங்கொடி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, தகாத உறவு காரணமாக வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு மகன்களையும் சின்னதுரையின் சகோதரி … Read more

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்!

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த தர்மேந்திரன் மற்றும் வீரேந்திரன் என்பவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.அங்கு தர்மேந்திரனுடைய எருமையை வீரேந்திரன் திருடி விட்டதாகவும்,வீரேந்திரனுடைய எருமையை தர்மேந்திரன் திருடி விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் காவல்துறையினர் குழம்பி இருந்தனர்.இறுதியில் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்து விட்டனர்.அதாவது தர்மேந்திரன் மற்றும் வீரேந்திர … Read more

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கையால், மேலும் 6 பேர் கைது செய்துள்ளனர். முக்கியமாக கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கானது கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர். இதனால் சந்தேகமடைந்த நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக … Read more