பூசாரியை உயிருடன் கொளுத்தி கொல்ல முயற்சி !!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஒரு கோவில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற சம்பவம் அரங்கேறி , பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது .இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசும் இயலாத நிலை அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் ,படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும், மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதனாலும் தான் , இச்சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதன் பட்டியல்களில் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும் இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் … Read more

சாலையோரம் கிடந்த தங்க நாணயங்கள் !! மக்கள் திரண்டதினால் பரபரப்பு !!

ஓசூர் அருகே சாலையோரம் குவிந்து கிடந்த தங்க நாணயத்தை சேகரிப்பதற்காக பொதுமக்கள் திரண்டதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் காவல் குடியிருப்பில் , கர்நாடக மாநிலம் சர்ஜபுரம் செல்லும் சாலை அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் திடீரென்று சென்றபோது தங்க நாணயங்களை, யாரோ வீசி சென்றிருப்பதாக தகவல் பரவியது. இதனால் அவ்விடத்திற்கு 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சேகரிக்கத் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. … Read more

ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் மாணவனை தாக்கியதால் மாணவன் மரணம் !!

சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் மல்லேஸ்வரி நகரில் வேலு என்பவர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவரது மகன் கார்த்திக் என்பவர் ,மேடவாக்கத்தில் கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக், கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் தனது நண்பர்களுடன் தகாத முறையில் விளையாடிக்கொண்டு இருந்ததாக ஆசிரியர்கள் இரும்பு ஸ்கேலால் கண்மூடித்தனமாக அடித்துள்ளனர். இதனால் சில மாணவர்களுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு இருந்தது.ஆசிரியர் அடித்ததில் கார்த்திக்கிற்கு தலையில் … Read more

பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!

சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன் ,தான் கடத்தப்பட்டதாக கூறி தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன்,டியூஷன் வகுப்புக்கு சென்றபோது மாயமாகியுள்ளான். சில நேரம் கழித்து சிறுவனின் தந்தை செல்போன்க்கு கால் வந்தது. அதில் உங்கள் குழந்தையை கடத்தி வைத்துக் திருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் சிறுவனை விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் … Read more

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் படி பெண்களுக்கு 18 வயது நிறைந்த நிறைவடைந்து இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டுமென்று சட்டம் உள்ள … Read more

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் பொருள் பறிமுதல் !!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதி வழியாக, கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற மினி டெம்போவை நிறுத்த கூறினார் .ஆனால், மினி டெம்போவை நிறுத்தாமல் சென்றதனையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள், மினி டெம்போ வாகனத்தைத் துரத்திச் சென்று குழித்துறை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இதனை அறிந்த … Read more

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, பான்பராக் , குட்கா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது .மேலும்  இதனால் இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து  மருந்து மாத்திரை விற்றதும் அம்பலமாகி உள்ளது . இது டாஸ்மாக் விற்பனையை காட்டிலும் அதிக அளவில் போதைப் பொருட்களான பான்பராக், குட்கா, கஞ்சா … Read more

மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருச்சி ,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா உட்கொள்வதாக எழுந்த புகாரில், அனைத்து மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்தனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், … Read more

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் இரவில் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த சில மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!

கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது சொந்த மகனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம், பனாஸ் காந்தா மாவட்டம் மெஹமத்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜி என்ற பெண் வசித்து வந்துள்ளார்.இவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருடன்& தகாத உறவு வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவக்கின்றனார். ஒரு நாள் இருவரும் தனியாக இருப்பதனை ராஜீவின் மகன் பார்த்தான் .இதைப்பற்றி தந்தையிடம் சொல்லக்கூடாது என்று ராஜி மற்றும் கள்ளக்காதன் இருவரும் ராஜீவின் மகன் ஜெகதீஷ் (6) … Read more