தேங்காய் எண்ணெய் + 2 பொருள் இருந்தால் சொட்டை தலையில் முடி வளர வைக்க முடியும்!!

0
90
#image_title

தேங்காய் எண்ணெய் + 2 பொருள் இருந்தால் சொட்டை தலையில் முடி வளர வைக்க முடியும்!! Nu

தலையில் முடி உதிரிந்த இடத்தில் மீண்டும் வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு முடி வளர்ச்சி எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை
2)பெரிய நெல்லிக்காய்
3)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.அதேபோல் ஒரு கப் அளவு விதை நீக்கிய பெரு நெல்லிக்காய் துண்டுகளை வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் உலர்த்திய கறிவேப்பிலை மற்றும் பெரிய நெல்லிக்காய் துண்டுகளை போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு காய்ச்சிக் கொள்ளவும்.

இந்த எண்ணையை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இதை தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் வளரத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)செம்பருத்தி இலை
3)வெட்டி வேர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் உலர்த்திய செம்பருத்தி இலை மற்றும் அரை கப் வெட்டி வேரை எண்ணையில் போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு காய்ச்சிக் கொள்ளவும்.

இந்த எண்ணையை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இதை தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் வளரத் தொடங்கும்.