பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி?

0
191
#image_title

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி?

வீட்டில் துணி தேக்கி வைத்திருக்கும் இடங்களில், ஈரப்பதம் உள்ள இடங்களிலும் பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இதில் பூரான் பலரையும் கடிக்கும் உயிரினமாக இருக்கின்றது. இந்த பூரான் கடியை குணமாக்க மருத்துவமனையை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

பூரான் கடித்தால் அந்த இடத்தில் தடுப்பு, அரிப்பு, சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதை எளிதில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்…

பூரான் கடித்த இடத்தில் வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பு சிறிதளவு பூசினால்… பூரான் விஷம் நீங்கி முழுமையாக குணமாகி விடும்.

அதுமட்டும் இன்றி வெற்றிலை, கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து சுண்ணாம்பு சேர்த்து கலக்கி பூரான் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் முழுமையாக நீங்கி விடும்.

கால் மூடி தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டு வந்தால் பூரான் விஷம் முறையும்.

குப்பைமேனி இலையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து விழுதாக்கி பூரான் கடித்த இடத்தில் தடவினால் அவை முழுமையாக குணமாகி விடும்.

வெற்றிலையுடன் சிறிது சுண்ணாம்பு மற்றும் சேர்த்து பூரான் கடித்த இடத்தில் பற்று போல் போட்டு வந்தால் பூரான் விஷம் முறையும்.