பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

0
101
#image_title

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

தமிழர் திருநாளில் ஒன்று பங்குனி உத்திரம்.முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரத்தில் விரதம் இருப்பது,முருகனை வழிபாடு செய்வது என்று இருந்தால் வாழ்வில் துன்பங்கள் வராது.

தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய இந்த பங்குனி உத்திரத்தில் வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து விட்டு தலைக்கு குளித்து விட்டு முருகனை வழிபட வேண்டும்.

இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனைக்கு ஒரு வழி கிடைக்கும்.

பங்குனி உத்திரம்: கடன் அடைய எப்படி முருகனை வழிபட வேண்டும்?

வீட்டு பூஜை அறையில் உள்ள முருகன் படத்தை சுத்தமான தண்ணீரில் காட்டன் துணி நினைத்து துடைக்க வேண்டும்.

பின்னர் முருகனுக்கு பட்டை போட்டு செவ்வரளி பூவில் மாலை கட்டி அணிவிக்கவும்.பின்னர் முருகனுக்கு பிடித்த தினை மாவில் தேன் சேர்த்து உருண்டை பிடித்து நெய்வேத்தியமாக படைக்கவும்.பின்னர் கடன் அடைய வேண்டும் என்று மனதார வழிபாடு செய்யவும்.