ஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!!

0
68
#image_title

ஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!!

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் அவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது.

தினமும் ஒரு பழம் உண்டால் உடலில் உள்ள பல நோய் பாதிப்பு விரைவில் குணமாகும். அந்த வகையில் நம் மண்ணில் விளையக்கூடிய பழ வகைகளில் ஒன்றான நாவலில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை சர்க்கரை நோய், மாரடைப்பு, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது.

நாவல் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*நாவலில் அதிகளவு கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

*இந்த பழத்தில் அதிகளவு கால்சியம் நிறைந்து இருப்பதால் அவை எலும்புக்கு தேவையான சத்துக்களை அளித்து அவற்றை வலுவாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

*நம்மில் பலர் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டு வருகிறோம். இதை சரி செய்ய நாவல் பழம் சாப்பிடுவது நல்லது.

*பசி உணர்வு இல்லாதவர்கள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லது.

*கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் நாவலை எடுத்துக் கொள்வது நல்லது.

*உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால் உடல் சோர்வு, இரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை தவிர்க்க இரத்த அளவு அதிகரிப்பது அவசியம். எனவே நாவல் கிடைக்கும் பொழுது வாங்கி உண்ண வேண்டும்.

*இந்த நாவல் பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்து காணப்படுகிறது.

*தோல் தொடர்பான பாதிப்பு நீங்க நாவல் பழம் உண்பது சிறந்த தீர்வாக இருக்கும்.

*பெரும்பாலானோர் மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றோம். காரணம் துரித உணவு, எளிதில் செரிமானமாகாத உணவுகளை உண்பது தான். இதனால் குடல் தொடர்பான பிரச்சனைகள் எளிதில் ஏற்பட்டு விடும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இந்த மலச்சிக்கல் பாதிப்பு நீங்க தினமும் 2 முதல் 3 நாவலை உண்பது அவசியம்.

*செரிமான பாதிப்பு இருபவர்கள் நாவல் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

*சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் நாவல் பழ விதைகளை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உரியப் பலன் கிடைக்கும்.