பெண்களே உங்கள் முகம் அதிக பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!

0
36
#image_title

பெண்களே உங்கள் முகம் அதிக பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!

நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம்.

முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:-

*முகத்தில் எண்ணெய் வடிதல்

*முகப்பரு

*கரும்புள்ளி பாதிப்பு

*முகக் கருமை

*இரசாயனம் கலந்த க்ரீம் பயன்படுத்துதல்

7 நாட்களில் முகம் பொலிவு பெற ஹோம் ரெமிடி:-

தேவையான பொருட்கள்:-

*பச்சை பயறு – 1 கைப்பிடி அளவு

*தக்காளி – 1

*ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பச்சை பயறு 1 கைப்பிடி அளவு சேர்த்து ஒரு சுத்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

அடுத்து ஒரு தக்காளி பழம் எடுத்து அதே மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பச்சை பயறு விழுதில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தில் போடுவதற்கு முன் ரோஸ் வாட்டர் சிறிதளவு எடுத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து பின்பற்றி வந்தோம் என்றால் பொலிவற்று இருந்த முகம் ஒரே வாரத்தில் பொலிவு பெறும்.