நரைமுடி கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி?

0
41
#image_title

நரைமுடி கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி?

இன்றைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை நரை பாதிப்பு இருக்கிறது. இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை முடியை கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – இரண்டு தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி

*உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கருகும் வரை விடவும். பின்னர் அடுப்பை அணைத்து கருகிய மஞ்சளை ஆற விடவும்.

அடுத்து ஒரு துண்டு கற்றாழை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

இந்த ஜெல்லை நன்கு கலக்கி அதில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவு ஜெல் எடுத்து சூடு படுத்தி வைத்துள்ள மஞ்சளில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். இவ்வாறு செய்தால் இயற்கையான ஹேர் டை தாயார் ஆகிவிடும். இந்த ஹேர் டையை தலையில் நரை இருக்கும் இடங்களில் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊற விடவும்.

பின்னர் தலைக்கு மையில்ட் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசினால் போதும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நரைமுடி அனைத்தும் கருமையாக மாறும்.