இந்த மாநிலங்களில் ஜூன் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு!

0
63

சமீபத்திய வானிலை கணிப்பின்படி கேரளா மகே மற்றும் லட்சத்தீவில் ஜூன் 5 வரை அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்திலிருந்து பருவமழை தொடங்குவதால் கேரளாவில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று பலப்படுத்த படுவதாலும், மாநிலம் முழுவதும் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு பருவக்காற்று வலுவடைந்த உள்ளதாகவும், அதற்கான சூழல் கேரளாவில் பரவலான விரிவாக்கம் காரணமாக ஜூன் 3 அன்று இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலைகள் உள்ளன என்று வானிலை செய்திகள் அறிவித்தது.

ஆனால் IMD இந்தியாவில் பருவமழை தொடங்கியது என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பருவமழையில் தொடக்கத்தை அறிவிக்க கேரளாவில் உள்ள 14 மற்றும் அதற்கு மேற்பட்ட வானொலி நிலையங்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு 25 மில்லி மீட்டர் மற்றும் அதற்கும் மேற்பட்ட மழைப்பொழிவை பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான நிலையான அளவுகோல்களை கொண்டுள்ளதாக வானிலை துறை பின்பற்றுகிறது.

அதுமட்டுமின்றி ஒரு அவதானிப்பின் அடிப்படையில் கேரளா கடற்கரையிலும் வெளிச்செல்லும் கதிர்வீச்சிலும் மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதை கருத்தில் கொண்டு பருவமழை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சமீபத்திய கணக்கின்படி கேரளா மகே மற்றும் லட்ச தீவுகளில் அதிகமான மழைபொழிவு ஜூலை 5ஆம் தேதி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழையின் தீவிரத்தை தெரியபடுத்த, மழைக்கால வருகையை குறிக்கும் விதமாக மற்றொரு அறிகுறி அரேபியக் கடலில் இருந்த நிலப் பகுதிகளுக்கு மேற்கிலிருந்து காற்று வீசுவது பலமாக உள்ளது.

தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரேபியக் கடலில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதுபோன்று காற்றின் வேகம் ஜூன் 5ஆம் தேதி வரை இருக்கும் என்றும், மன்னார் வளைகுடா மற்றும் கொமொரின் வளைகுடாவில் இதே போன்று காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதனால் சனிக்கிழமை வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 1-ல் இருந்து தென் மாநிலங்களில் பருவமழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பினும், பருவமழை தொடங்காததற்கு காரணம் தேதி தீர்மானிப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Kowsalya