பைல்ஸ்? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

0
53
#image_title

பைல்ஸ்? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

மூல நோய் என்பது மிகவும் அவதிப்பட வைக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். இந்த மூல நோயில் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது. மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக மாறி விடும். வற மலம் வெளியேறும் பொழுது வலி அதிகமாக ஏற்பட்டு அவை வெளியேறும் பகுதிகளில் புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாதிப்பை இயற்கை வழிமுறைகளை பின்பற்றி குணப்படுத்துவது நல்லது.

மூல நோய் அறிகுறிகள்:-

*ஆசனவாய் பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல்

*ஆசனவாய் சுற்றி வீக்கம் அல்லது கட்டிகள்

*மலத்துடன் இரத்த போக்கு

*மலம் கழிப்பதில் சிரமம்

மூல நோயை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:

*துத்தி இலை – சிறிதளவு

*கரு மஞ்சள் – சிறு துண்டு

*பசும்பால் – 1 டம்ளர்

செய்முறை:

முதலில் சிறிதளவு துத்தி இலையை எடுத்து பாத்திரத்தில் போட்டு நன்கு அலசிக் கொள்ள வேண்டும். அடுத்து சிறு துண்டு கரு மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அம்மி இருபவர்கள் அதில் அரைக்கலாம். இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைக்காலம். இந்த இரண்டு பொருட்களளையும் மைய்ய அரைத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பசும்பால் ஊற்றி சூடுபடுத்தவும். பால் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள துத்தி இலை + கருமஞ்சள் விழுதை அதில் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இந்த பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதினால் நாள்பட்ட மூலம் சரியாகும்.