ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க பல 100 ஆண்டுகளாக சதி நடைபெறுகிறது! வானதி ஸ்ரீனிவாசன்!

இந்தியாவில் தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய மதமாக பார்க்கப்படுவது இந்து மதம். ஆனால் அந்த இந்து மதத்தை அழிப்பதற்கு பலகாலமாக சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் இந்து மக்களையும், இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அவ்வபோது அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் இப்படி இந்து மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதில் அவர்களுக்கு சுய லாபமும் இருக்கிறது. சிறுபான்மையினரை திருப்தி படுத்தியதற்காகவே அவர்கள் இவ்வாறு அடிக்கடி பேசி வருகிறார்கள். ஆனால் இதில் … Read more

இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!!

இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!! கோவையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மற்றும் அரசாணைப்படி கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனால் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சார்பில், … Read more

திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிய திட்டங்களை திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து செயல்படுத்தாமலிருக்கிறது என முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளும் வெகு நாட்களாக தீர்க்கப்படாமலிருக்கின்ற 10 பிரச்சனைகளை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை கடிதம் வழங்க சட்டசபை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த வகையில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கோரிக்கைகளை தனித்தனி பட்டியலாக தயாரித்து … Read more

வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம்!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டி பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வபோது விட்டு, விட்டு, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதோடு தொடர்மழையின் காரணமாக, சோலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, சில பகுதிகளில் மண் சரிவு உண்டாகி வீடுகள் சேதமடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், … Read more

கள்ள காதலால் வந்த வினை! மகன் செய்த செயலால் தந்தை பரிதாபம்!

கோயமுத்தூர் புளியக்குளம் அருகே இருக்கின்ற அம்மன் குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும், வனிதா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கருப்புசாமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அதே பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுடன் பழக்கம் … Read more

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்!

Helicopter exploded and scattered! Viral video! Tourists explaining what happened!

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்! நேற்று முன் தினம் இந்த நேரத்திற்கெல்லாம் குன்னூர் மலைப் பகுதியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்த நிலையில், விமானி மட்டும் இன்னும் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அதன் காரணமாக அவரை பெங்களூர் அழைத்துச் சென்று … Read more

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்!

Student commits suicide due to sexual harassment! Great work done by fellow students!

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்! கோவை மாவட்டத்தில் ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்விக்கான  வழிமுறைகள் அனைத்தும் கைப்பேசி மூலமே  நடந்தேறியுள்ளது. அதன் காரணமாக பலரது வீட்டில் புது கைப்பேசிகள் வாங்கும் அளவு அது முக்கியத்துவம் வாய்ந்தவையாக … Read more

துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜக பிரமுகர்! கோவையில் பரபரப்பு!

கோயமுத்தூரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரதீப் ஜெகதீசன், இவருடைய மனைவி சவுமியா, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக இருக்கும் பிரதீப் ஜகதீசன் அவருடைய பிறந்த நாளை அன்மையில் கொண்டாடினார். அந்த சமயத்தில் தன்னுடைய மனைவி சௌமியா உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அந்த புகைப்படத்தில் அவரது … Read more

பார் உரிமையாளர்களை மிரட்டும் உடன் பிறப்புகள்! கோவையில் பரபரப்பு!

கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கின்ற கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய இளைஞரணி திமுக அமைப்பாளராக இருந்து வருபவர் பாலச்சந்திரன் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளுக்கு சென்று அந்த கடையின் உரிமையாளர்களை சந்தித்து தன்னை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் அனுப்பி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு தங்களுக்கு நாள்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும், பணம் கொடுக்க இயலாத பட்சத்தில் வேறு ஆட்களை வைத்து நாங்களே பார்களை நடத்திக் கொள்கின்றோம் என்றும், நீங்கள் … Read more

ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் 1000-யைக் கடந்த கொரோனா பாதிப்பு… 2 மாவட்டங்களில் மட்டும் தொற்று உச்சம்!

Corona virus

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியதைப் போலவே நடப்பு ஆண்டிலும் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கட்டாய மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தொற்றின் தீவிரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பொதுக்கூட்டம், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என … Read more