ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை பற்றி பேசிய ரெயினா

சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார். நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன். இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த … Read more

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று … Read more

மெஸ்சியின் தகவலால் அதிர்ச்சி அடைந்த பார்சிலோனா அணி

இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மெஸ்சி ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என பேயர்ன் முனிச் அணி துவம்சம் செய்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா … Read more

ஒருவருடம் இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவி

சுவீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சு சர்வதேச அளவில் வரவேற்பை பெற்று பாராட்டுகளை குவித்தது. இந்த நிலையில் கிரேட்டா தன்பர்க், காலநிலை மாற்றத்திற்கான … Read more

தலிபான்கள் மீது பொருளாதாரத் தடையை விதிக்குமா பாகிஸ்தான்?

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிவிப்பு “கவனமாக பரிசீலிக்கப்பட்டு முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டது”. அனைத்து நாடுகளும் ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானங்கள் 2255, 1988, 1267 மற்றும் 2253 ஆகியவற்றுடன் இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, மேலும் ஆப்கானிஸ்தான் “பாகிஸ்தானின் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.  மேற்கூறிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் சர்வதேச பொறுப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. பயணக் கட்டுப்பாடுகள், ஆயுதத் தடை … Read more

தன்னுடைய குடும்பத்தையே கொன்ற தடகள வீரர்?

அமெரிக்காவில்  குடியேறிய  இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரர் இக்பால் சிங். 62 வயதான இவர் 1983-ம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர். பின்னர் அமெரிக்காவில் உள்ள   நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வந்தார். இவருடன் தாய் மற்றும் மனைவி இருந்ததாக கூறப்படுகிறது. டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய் மற்றும் மனைவி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் தன்னைத்தானே … Read more

சுவாமி நித்யானந்தா மீது மீரா மிதுனுக்கு இப்படி ஒரு விருப்பமா?பகிரங்க பதிவு!

சில பிரபலங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தான் எப்படியாவது மக்களிடம் வைரல் ஆக வேண்டும் என்னும் எண்ணத்தில் முன்வந்து சர்ச்சைகளில் சிக்கி வலைத்தளங்கள் முழுவதும் அவர்களது பெயர்கள் சுழல வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவ்வகையில் மாடல் அழகி மீரா மிதுன் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு எனலாம். இவர் விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்று நெகட்டிவ் சர்ச்சைகளுக்கு உள்ளாகி தனது பெயரை தானே தாழ்த்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவர் பங்கு … Read more

சசிகுமார் பட நடிகைக்கு திருமண பேச்சுவார்த்தையா? முடிந்தது நிச்சயதார்த்தம்!

நம் மக்களிடையே திரையுலகில் அதிக படங்களில் தன் முகங்களை காட்டாவிட்டாலும் குறைந்த படங்களின் மூலம் மக்களின் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்திய நடிகர் நடிகைகளும் இருக்கின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யாவின் “அமரகாவியம்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த “மியா ஜார்ஜ்” நல்ல வரவேற்பை பெற்றார். அவர் பள்ளி சீருடையில் பவ்யமான தோற்றத்தில் அறிமுகமாகி ஆழமாக காதல் செய்யும் பள்ளிப்பருவ பெண்ணாக ரசிகர்கள் மனதில் பதிந்தார். தமிழ் திரையுலகில் இதுவே இவருக்கு முதல் படம். இவர் … Read more

அனைத்து வீரர்களுக்கும் ஊக்கமருந்து சோதனையா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் விளையாட்டு  துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தான் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த இந்த வருடம் ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெற உள்ளது. அனைத்து அணி வீரர்களும் அமீரகத்திற்கு சென்று விட்டனர். இதையொட்டி தேசிய … Read more

தடுப்பூசி குறித்து முதல்கட்ட மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more