தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்..

0
93
The grandson who brutalized his grandfather!! Money covered the eyes!! The old man collapsed in a flood of blood..
The grandson who brutalized his grandfather!! Money covered the eyes!! The old man collapsed in a flood of blood..

தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் தான் மருதை.இவருடைய வயது 80. இவருடைய மனைவி முத்தம்மாள் வயது 75.இந்நிலையில் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள்.இதனைதொடர்ந்து அவர் வீட்டிற்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் இருந்துள்ளது.

நீண்ட நாட்களாக இவர்கள் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.அதில் சொத்து பிரச்சனை தான் அவ்வப்போது வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முருகேசனின் மூத்த மகன் சக்திவேல் என்பவர் நேற்று நள்ளிரவில் மருதையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாம் ஒரு கட்டத்தில் முற்றியது. மருதை மூத்த மகன் சக்திவேல் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருதையை சராமாரியாக குத்தியுள்ளார்.நிலைகுலைந்த நிலையில் சரிந்து கீழே விழுந்துள்ளார் மருதை.கொலை செய்தது வெளியில் தெரிந்தால் தன்னை  போலீஸ் கைது செய்து விடுவார்கள் என எண்ணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பிறகு ரத்த வெள்ளத்தில் மருதை துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதனை பார்த்த  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து எரியோடு காவல்துறையினருக்கு தகவல்கொடுத்தனர்.மேலும்  சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி விசாரணை நடத்தி  வருகின்றார். சொத்திற்காக பேரனே தாத்தாவை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K