அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

0
96
#image_title

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

வாழ்வில் நிம்மதியே இல்லை என்று சிலர் புலம்பி கேள்விப்பட்டிருப்போம்.ஏன் நாமே கூட சில சமயங்களில் நிம்மதி இல்லை என்று அழுது புலம்புவோம்.

பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் வாழ்வில் நிம்மதி இல்லை என்றால் மிகவும் சிரமமாகி விடும்.நிம்மதி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரிடம் உள்ளது.வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமானால் நிம்மதி இழக்க நேரிடும்.

இந்த நிம்மதி கிடைக்க கோயிலுக்கு செல்லுங்கள் என்று சொல்லவில்லை.வீட்டிலேயே மூன்று பொருட்களை கொண்டு ஒரு எளிய பரிகாரத்தை செய்தலே போதும்.அவை என்னென்னெ பொருட்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.கல் உப்பு,மஞ்சள் தூள்,பச்சை கற்பூரம் தான் அந்த 3 பொருட்கள்.

இந்த பொருட்களை பூஜை சாமான் விற்கும் கடைகளில் வாங்கி கொள்ளவும்.கல் உப்பை மட்டும் மளிகை சாமான் விற்கும் கடைகளில் வாங்கிக் கொள்ளவும்.

பொருட்களின் அளவு:

1)மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
2)பச்சை கற்பூரம் ஒரு துண்டு
3)கல் உப்பு ஒரு ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் இந்த மூன்று பொருட்களையும் சொல்லப்பட்டுள்ள அளவுப்படி போட்டு பூஜை அறையில் வைக்கவும்.இதை எந்த நாளில் வேண்டுமாலும் செய்யலாம்.பிறகு பூஜை அறையில் அமர்ந்து சில நிமிடங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக உட்காருங்கள்.பின்னர் கிண்ணத்தில் உள்ள பொருட்களை மனதார தொட்டு வணங்கவும்.

இந்த பொருட்களை மாதம் ஒருமுறை மாற்றவும்.இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.