முன் நெற்றி முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கண் கூடாக தெரியும்!!

0
165
#image_title

முன் நெற்றி முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கண் கூடாக தெரியும்!!

ஆணோ,பெண்ணோ முன் நெற்றி பகுதியில் முடி உதிர்தல் பாதிப்பு இருந்தால் இளம் வயதில் முதுமை தோற்றம் ஏற்பட்டு விடும்.இந்த முன் நெற்றி முடி உதிர்வு பாதிப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)சின்ன வெங்காயம்
3)கருஞ்சீரகம்
4)ஆவாரம் பூ
5செம்பருத்தி பூ
6)செம்பருத்தி இலை
7)வெட்டி வேர்
8)கற்றாழை துண்டு
9)வெந்தயம்
10)வேப்பிலை
11)கறிவேப்பிலை

செய்முறை:-

10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும்.ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இடித்த சின்ன வெங்காயம்,கற்றாழை துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு வேப்பிலை 1/2 கைப்பிடி அளவு,கறிவேப்பிலை 1/4 கைப்பிடி அளவு,10 செம்பருத்தி இலை,10 செம்பருத்தி பூ,1/4 கப் ஆவாரம் பூ சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு 1/2 தேக்கரண்டி வெந்தயம்,1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம்,1/4 கைப்பிடி அளவு வெட்டி வேர்
சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.இதை தினமும் தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலை முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளரத் தொடங்கும்.

முன் நெற்றி பகுதியில் முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் புதிய முடி வளரத் தொடங்கும்.