மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்!

0
61
#image_title

மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்!

வயது மூப்பு காரணமாக ஏற்படக் கூடிய மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் ஆயில் ஒன்றை தயார் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

பிரண்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஆயில் மூட்டு வலியை குணப்படுத்த சிறந்த தீர்வு ஆகும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை
2)நல்லெண்ணெய்
3)தேங்காய் எண்ணெய்
4)சூடம்

செய்முறை:-

ஒரு கப் அளவு பிரண்டை துண்டு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் மற்றும் 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அரைத்த பிரண்டை பேஸ்டை சேர்த்து மிதமான தீயில் காய்ச்சிக் கொள்ளவும். அடுத்து சூடம்(கற்பூரம்) ஒன்று எடுத்து தூளாக்கி அதில் சேர்க்கவும். இவை அனைத்தும் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும். தினமும் இரவு மூட்டு பகுதியில் தடவி மஜாஜ் செய்துவிட்டு தூங்கவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கூடிய விரைவில் மூட்டு வலி முழுமையாக குணமாகிவிடும்.