சிவ பூஜைக்கு ஏற்ற ஜோதிர்லிங்கங்க தளங்கள்!

கேதாரம்- இமயம் (கேதாரேஸ்வரர்) சோமநாதம்- குஜராத் (சோமநாதீஸ்வரர்) மகாகாளே ஸம் உஜ்ஜயினி (மகாகாளேஸ்வரர்) விஸ்வநாதம்- காசி(விஸ்வநாதேஸ்வரர்) வைத்தியநாதம்- மகாராஷ்டிரம் (வைத்தியநாதர்) ஓங்காரேஸ்வரம்- மத்தியபிரதேசம்- (ஓங்காரேஸ்வரர்) திரியம்பகம் மகாராஷ்டிரம்- (திரியம்பகேஸ்வரர்) குசு மேசம் மகாராஷ்டிரம்-(குஸ்ருனேஸ்வரர்) மல்லிகார்ஜுனம் ஸ்ரீசைலம்- (மல்லிகார்ஜுனர்) ராமநாதம்- ராமேஸ்வரம் (ராமநாதர்)

கபிலேஸ்வரர் வருடாந்திர பவித்ரோட்சவம்!

திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் பவித்ரோட்சவம் மூன்று தினங்கள் நடைபெறுகிறது. வருடம் முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகிறது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் என்று எல்லோரும் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோட்சவம் நடத்தப்படுகின்றது. பவித்ர உற்சவத்தின் முதல் நாளான 21ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பத்து மணி வரையில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் ,பால் … Read more

வெல்லப்பாணகத்தை தத்ரூபமாக குடிக்கும் நரசிம்மர்!

கடவுளை நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு வேதங்களின் வாக்கு என்று சொல்லப்படுகிறது. நன்மைக்கும், தீமைக்கும் ஆன போராட்ட சமயத்தில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்திருக்கிறது. அப்படி தன்னுடைய நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்துகொண்ட தன்னுடைய பக்தனான பிரகலாதனை தெரிவித்த தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், என்ற சத்திய வாக்கை நிரூபிப்பதற்காக அந்தத் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வந்து அரக்கர் தலைவனான இரணியகசிபுவை வதம் செய்த மகாவிஷ்ணுவின் அவதாரம் நரசிம்ம அவதாரம். அப்படிப்பட்ட நரசிம்மரின் ஒரு அதிசயமான … Read more

திருமண தடை நீக்கும் மகுடேஸ்வரர்!

ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணியத் தலமாக கருதப்படும் கொடுமுடி திருத்தலம் திகழ்ந்து வருகிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால், உள்ளிட்ட மும்மூர்த்திகளும் வீற்றிருக்கிறார்கள்0 இவர்கள் மூவரும் ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கும் சிறப்பு இந்த கோவிலுக்கு இருக்கிறது திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக சொல்வார்கள். அதே போல இங்கே மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இங்கே இருக்கின்ற சிவபெருமானை மகுடேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இந்தத் தல இறைவன் சுயம்பு மூர்த்தி ஆவார் … Read more

ஹனுமனை வழிபட்டால் ஏற்படும் பலன்கள்!

ராமாயணத்தில் வரும் ஹனுமன் அனேக சிறப்புகளை பெற்றவர். மனிதனாக பிறந்து மனிதனாகவே வாழ்ந்த ராமபிரானின் முதன்மை கட்டணம் மற்றும் தூதுவராகவும், இருந்து சிறப்பு வாய்ந்தவர் அனுமன் நம்முடைய நாட்டின் perumalukku இணையாக ஆஞ்சநேயருக்கும் அனேக கோவில்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் பரபரப்பான உலகத்தில் கடவுள் வழிபாடு செய்வதற்கு கூட பலருக்கு நேரமில்லை இறைவனின் அருளைப் பெறுவதற்கு ஆடம்பரமான பூஜை செய்வது தான் வழி என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. அந்த விதத்தில் ஆஞ்சநேயரின் அருளை பெறுவது மிகவும் … Read more

ஆடிப் பெருந்திருவிழா! மோகினி திருக்கோலத்தில் காட்சி அளித்த கள்ளழகர்!

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் வருடம் தோறும் ஆடி தெரு திருவிழா பிரசித்தி பெற்றதாக சொல்லப்படுகிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, ஆடி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை அழகர் கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 11 தினங்கள் நடைபெறும் ஆடிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொடியேற்றம் 16ஆம் தேதி நடைபெற்றது நோய் தொற்று பரவல் காரணமாக, காலை 9 மணிக்கு … Read more

ஆடி மாத பவுர்ணமி விரதத்தால் கிடைக்கும் முக்கிய பயன்கள்!

தமிழ் மாதங்களில் பல சிறப்புகள் கொண்ட ஒரு அற்புதமான மாதமாக ஆடி மாதம் விளங்கி வருகிறது. இந்த ஆடி மாதத்தில் பெண் தெய்வங்களுக்கான வழிபாடுகள் மற்றும் பூசைகள் போன்றவை மிகச் சிறப்பாக செய்யப்படும். தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் இந்த ஆடி மாதத்தில் திருமணம், புதுவீடு புகுதல், போன்ற சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகின்றது. இதைப்போன்ற ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு மிக முக்கியமான தினம்தான் ஆடி பவுர்ணமி தினம். மிகச்சிறப்பான தினமான ஆடிப் பவுர்ணமி தினத்தில் … Read more

நிறைவு பெற்றது திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலின் ஜேஷ்டாபிஷேக விழா!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாள் நடைபெறும் அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நேற்று கடைசி நாளாகும் நேற்று தினம் அதிகாலை கோவிலில் சுப்ரபாத சேவை நடைபெற்றது. காலை 10 மணி அளவில் இருந்து மதியம் 12 மணி வரையில் கோவில் விமான பிரகாரத்தில் உற்சவர்கள் ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின்னர் சத கலச ஹோமம், மகா சாந்தி ஹோமம், உள்ளிட்டவை மதியம் 12 மணி அளவிலிருந்து மதியம் ஒரு … Read more

கோலாகலமாக நடந்த சங்கர நாராயணசாமி ஆடிதபசு விழா!

சங்கரன் கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா சென்ற 13ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழா தினங்களில் அந்தந்த மண்டகப்படியில் சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் உள்ளேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த மண்டகப்படி தாரர்கள் மட்டும் 50 பேர் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்படுகிறது. விழாவின் சிகர நாளான ஆடி தபசு திருவிழா இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக தெற்கு … Read more

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !! எலுமிச்சை தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபாடு செய்து வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் அதனைப்பற்றி தற்போது காண்போம். எலுமிச்சைபழம் தீய ஆவிகளை விரட்டுவதற்கு மிகவும் பயன்படுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் திரிசூலம், கதவின் இருபுறங்களிலும் இதனை நாம் வைக்கின்றோம். இதனை தொடர்ந்து தீயவைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும், மிளகாய் சேர்த்து கட்டி வீட்டிற்கு … Read more