உலகிலேயே அதிகமான வெப்பநிலை பதிவான நாடு?

டெத் வேலி என்ற தேசியப் பூங்கா கலிஃபோர்னியாவில் உள்ளது அங்கு வெப்பநிலை 54.4 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இதுதான் உலகிலேயே அதிகமான வெப்பநிலை என்று அமெரிக்க தேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. அதன் மேற்குக் கரையில் அனல் காற்று வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள மின் ஆலை ஒன்று அதிக வெப்பத்தினால் செயல் இழந்தது. இதற்கு முன் 54 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததும் இதே டெத் வேலியில்தான். தற்போதைய … Read more

தடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் அனைத்து சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 20 லட்சத்தை தாண்டியது. இந்த கொடிய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. … Read more

அதிபரை பற்றி இப்படி சொல்வதா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா. இவருடைய மனைவியான மைக்கேல் டிரம்ப்பை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். டிரம்ப் நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு மோசமான ஜனாதிபதி. வெள்ளை மாளிகையில் எந்த ஒரு நம்பிக்கை மற்றும் ஒற்றுமை என எதுவும் இல்லை இதை காண்பது அரிது. அங்கு நமக்கு தெரிவது சந்தேகம் மற்றும் குழப்பமே ஆகும். ஒபாமா அவர்கள் எந்த நிலையில் பணியாற்றிய போதும் சிறந்த துணை ஜனாதிபதியாக விளங்கினார். மிகவும் விசுவாசம் மற்றும் கண்ணியமான மனிதர் என்றால் … Read more

பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யவில்லை

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை ஹாங்காங்கில் இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை … Read more

அதிபரின் மனைவி தொற்றிலிருந்து குணமடைந்தார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த வைரஸ் சாதாரண மக்களுக்கும் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா அதிபர் மற்றும் பிரிட்டன் அதிபர் ஆகியோருக்கும் இந்த தொற்று ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ முழுமையான ஊரடங்கு பிறப்பிப்பதிலும், முக கவசம் அணிவதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக … Read more

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரில் இரண்டு நாட்களுக்கு முன் நடுஇரவில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு நடந்த அனைத்து பகுதியும் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.  இது மட்டுமல்லாமல் நகரின் வேறு 2 இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் … Read more

முதன் முறையாக திருப்பி விடப்பட்ட விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு முதன் முறையாக  டெல்டா திரஸ்டர் என்ஜின் இயக்கப்பட்டு  ஹோப் என்ற அமீரகத்தின் விண்கலம் திருப்பி விடப்பட்டது. இது குறித்து முகம்மது பின் ராஷித்  விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கூறும்போது இந்த ஹோப் விண்கலம் இந்த மையத்திலியே உருவாக்கப்பட்டது. இந்த விண்கலத்தின் எடை 1,500 கிலோ ஆகும். இதில் 3 சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது இந்த சூரிய மின்தகடுகளால் 1,800 வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய ‘டெல்டா-5’ என்ற திரஸ்டர் … Read more

8 லட்சத்தை நெருங்கி வரும் பலியானவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் விமான சேவைகள் உள்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் … Read more

இரு நாடுகளுமே ஆதரவை கடைப்பிடிப்பதே சிறந்த வழி

இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் லடாக் எல்லை பிரச்சினையால் மோதல்கள் நீடித்து வருகிறது.  கடந்த ஜூன் மாதத்தில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் சில வீரர்கள் இறந்தனர். இந்த மோதல் காரணமாக சீன செயலியான டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. 2 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க பல … Read more

ரிக்டர் அளவில் மோசமான நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதியான மணிலாவிலிருந்து தென்கிழக்கில் 451 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் பல கட்டிடங்கள் உள்ளிட்டவை பயங்கரமாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பயத்தில் … Read more