உயிர் பயத்தைக் காட்டும் டெங்கு காய்ச்சல்!! தப்பிக்க இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!! உரிய பலன் கிடைக்கும்!!

0
34
#image_title

உயிர் பயத்தைக் காட்டும் டெங்கு காய்ச்சல்!! தப்பிக்க இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!! உரிய பலன் கிடைக்கும்!!

கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.இந்த காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஏற்படுகிறது.தண்ணீர் அதிகம் தேங்கி கிடக்கும் பகுதிகளில் இவை விரைவில் உற்பத்தியாகி விடுகிறது.தற்பொழுது தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.கொய்யா இலை,வேப்பிலை போன்றவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கக்கூடியது.இதை பயன்படுவதால் சளி,விஷக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

கொய்யா  இலைகள் – 3

தேன் – 1 தேக்கரண்டி
(அல்லது)
பனங்கற்கண்டு

செய்முறை:-

*அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

*பின்னர் கொய்யா இலைகள் 3 எடுத்து நன்கு அலசி கொதிக்கும் த்ண்ணீரில் கள்ளி போடவும்.

*அவை கொதித்து நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும்.

*இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.சுவைக்கேற்ப தேன் கலந்து பருகவும்.
இந்த கொய்யா இலைகள் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதால் இவை டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த பானமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

சுக்குப்பொடி – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

கடுக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி

கோரைக் கிழங்கு – சிறிதளவு

இந்துப்பு – 1/2 கிராம்

தேன் – தேவைக்கேற்ப

செய்முறை:-

* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

*அவை சூடேறியதும் அதில் கோரைக் கிழங்கு சிறிதளவு,கருவேப்பிலை ஒரு கொத்து,சுக்குப்பொடி,கடுக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.1 கப் தண்ணீர் பாதியாக குறைந்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.

*பிறகு அதை ஒரு பவுலில் வடிகட்டி அதில் 1/2 கிராம் இந்துப்பு மற்றும் தேவைக்கேற்ப தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இந்த பானம் சளி மற்றும் விஷ காய்ச்சலை குணமாக்கும்.

அதேபோல் பாத்திரத்தில் வேப்பிலை ஒரு 1/4 கைப்பிடி அளவு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு அதை வடிகட்டி குடிக்கவும்.இப்படி செய்தால் விஷ காய்ச்சலை குணமாகும்.