2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை!

0
29
#image_title

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை!

நாள் தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் பின்னாளில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகளை பாலோ செய்யுங்கள்.உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*சர்க்கரை – 1தேக்கரண்டி

*விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

2.பின்னர் அதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

3.அதன் பின்னர் ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ள வெந்தயப் பொடி,1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

4.இதையடுத்து 1 தேக்கரண்டி விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்.பிறகு அதனை சாப்பிட வேண்டும்.இவ்வாறு செய்தால் அடுத்த 2வது நிமிடத்தில் உடலில் தேங்கி கடந்த மலம் உடனடியாக வெளியேற தொடங்கும்.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1 தேக்கரண்டி

*விளக்கு எண்ணெய் – 1தேக்கரண்டி

*உப்பு – 1 சிட்டிகை

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும்.பிறகு 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

2.பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சுத்தமான விளக்கு எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

3.அதன் பிறகு 1 சிட்டிகை அளவு சாதாரண உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து கலக்கவும்.

4.அதனோடு எலுமிச்சை சாறு 10 முதல் 15 சொட்டுகள் விட்டு அவற்றை குடிக்கவும்.இவ்வாறு செய்தால் அடுத்த 20 நிமிடங்களில் மலசிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.