பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

0
112
#image_title

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 10

*பூண்டு – 10 பற்கள்

*வெற்றிலை – 3

*கிராம்பு பொடி – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.இந்த விழுதை ஒரு மாற்றவும்.

அதன் பின் வெற்றிலை எடுத்து காம்பு நீக்கி அதனை மிக்ஸி ஜாரில் போடவும்.அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.இதை வெங்காயம் + பூண்டு விழுதில் கலந்து கொள்ளவும்.

பின்னர் கிராம்பு(இலவங்கம்) 10 முதல் 15 வரை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.அதை வெங்காயம் + பூண்டு + வெற்றிலை கலவையில் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.

தயார் செய்து வைத்துள்ள இந்த கலவையை இரவு தூங்கும் பொழுது தான் மூட்டுகளில் பயன்படுத்த வேண்டும்.இந்த பேஸ்டை முழங்கால் மூட்டுகளில் தடவி 10 நிமிடம் காய விடவும்.பின்னர் ஒரு காட்டன் துணி கொண்டு முழங்கால் மூட்டுகளை சுற்றி கட்டி கொள்ளவும்.பின்னர் காலை எழுந்தவுடன் மூட்டுகளில் கட்டியுள்ள கட்டை அவிழ்த்து வெந்நீர் கொண்டு மூட்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் மூட்டுகளை ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்து விட்டு அதில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் சரியாகி விடும்.