உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

0
189
#image_title

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

‘நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நோயின்றி வாழ்வது தான் மிகவும் முக்கியம். உடலை வலுவாக வைத்துக் கொண்டால் அதாவது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த ஒரு நோய் பாதிப்பும் அண்டாது.

உடலை இரும்பாக்கும் மேஜிக் கஞ்சி பொடி தயார் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவைப்படும் பொருட்கள்…

*பனங்கிழங்கு
*சிவப்பு அரிசி
*பார்லி அரசி
*ஏலக்காய்
*பாதாம் பருப்பு
*முந்திரி பருப்பு

செய்முறை விளக்கம்…

10 பனங்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் அளவு சிவப்பு அரிசி மற்றும் 1/2 கப் அளவு பார்லி அரிசி சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

தொடர்ந்து 10 பாதாம், 10 முந்திரி, 1 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும். அதோடு உலர்த்திய பனங்கிழங்கை சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

கஞ்சி காய்ச்சும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் 2 ஸ்பூன் அளவு தயார் செய்து வைத்துள்ள பொடி சேர்த்து கஞ்சி காய்ச்சி காலை உணவிற்கு முன் குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பு போல் வலுப்பெறும்.