கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியை குறிவைக்கும் திமுகவின் கழுகுப்பார்வை!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியை குறிவைக்கும் திமுகவின் கழுகுப்பார்வை!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அந்தந்த கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வரும் முக்கிய தலைவர்கள் அவரவர்களுக்கு பிடித்தமான தொகுதிகளிலும் தாங்கள் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளிலும் களம் காண இருக்கிறார்கள்.அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் மறுபடியும் போட்டியிட இருக்கிறார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சொந்த … Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து! சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது.இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இதனைத்தொடர்து அவரவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு ,ஆத்தூர் ,கெங்கவல்லி ,ஆகிய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம் செய்கின்றார். அதேபோல் இன்று தம்பம்பட்டி கெங்கவல்லியில் போட்டியிடும் நல்லதம்பியை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.இதனால் தம்பம்பட்டி பேருந்து நிலையம் … Read more

நேருக்கு நேர் சந்திக்கும் இமயமும் சிகரமும்! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

நேருக்கு நேர் சந்திக்கும் இமயமும் சிகரமும்! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

தமிழ்நாட்டிலே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. மிகக்குறைந்த தினங்களே தேர்தலுக்கு இருக்கும் சமூக காரணத்தால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இன்றைய தினம் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி இருக்கிறது. தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய அந்த நிமிடத்தில் இருந்து பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் இன்றைய தினம் திமுக சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே அதுவும் வேட்புமனுத்தாக்கல் போலவே … Read more

அம்மாவின் மறு உருவமே கொண்டாடும் ஆதரவாளர்கள்! கெத்து காட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

அம்மாவின் மறு உருவமே கொண்டாடும் ஆதரவாளர்கள்! கெத்து காட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் பலவிதமான வியூகங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பல யுத்திகளை கையாண்டு வருகிறார்கள்.அப்படிப் பார்த்தோமானால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் யுத்திகளை அப்படியே கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய செயல்பாடு இருந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் என்னதான் அதிமுக … Read more

அதிமுகவின் கோட்டைக்குள் நுழைந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் கோட்டைக்குள் நுழைந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே அவர் அவர்களுக்கு இருக்கின்ற வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதிலும், அந்தந்த கட்சிகள் பலத்துடன் இருக்கும் பகுதிகளில் அந்த கட்சிகளின் பலத்தை இன்னுமும் அதிகப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும், ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல அதிமுகவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் திமுகவும் தனி குழு அமைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.இப்படி இரு கட்சிகளுக்கும் இடையே … Read more

ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்த கூட்டணி கட்சிகள்! தலையில் கை வைத்த திமுக தலைமை!

ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்த கூட்டணி கட்சிகள்! தலையில் கை வைத்த திமுக தலைமை!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது, பரப்புரை மேற்கொள்வது, வேட்பாளரை தேர்வு செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, போன்ற கட்சி வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை போன்றவற்றை முழுமையாக முடித்து விட்டதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் இறுதி … Read more

தேமுதிகவின் கூட்டணி விலகலுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? கேட்டு அதிர்ந்து போன முக்கிய கட்சி!

தேமுதிகவின் கூட்டணி விலகலுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? கேட்டு அதிர்ந்து போன முக்கிய கட்சி!

கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தரப்பு தர மறுத்து விட்டது என்று தேமுதிக சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் பாண்டியராஜன் இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது தேமுதிக எங்களுடைய கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால் தற்போது நாங்கள் போட்டியிடும் தொகுதி விட இன்னும் அதிக தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது … Read more

அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்காக பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் அந்த கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அனைத்தும் ஒதுக்கி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்தது. இருந்தாலும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை 6 தொகுதிகள் தான் ஒதுக்கியது. அந்த ஆறு தொகுதிகள் வருமாறு, பட்டுக்கோட்டை, திருவிக நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு, கில்லியூர், … Read more

கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது! பிரச்சாரத்தில் முதல் ஆளாக குதித்த முதல்வர்!

கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது! பிரச்சாரத்தில் முதல் ஆளாக குதித்த முதல்வர்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம் ஆகிறது. இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்றையதினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக நாளை முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றார். இதன் காரணமாக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோயமுத்தூர் போகும் அவர், அங்கிருந்து கார் மூலமாக வாழப்பாடி போகின்றார். அதன்பிறகு … Read more

தடுப்பூசி போட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தடுப்பூசி போட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சென்னையில் இருக்கின்ற ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதேபோல சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்களும் இந்த … Read more