உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

0
101
#image_title

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

உடல் ஆரோக்கியமாக,வலிமையாக இருக்க உளுந்து பருப்பில் கஞ்சி செய்து சாப்பிட்டு வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து
2)பாதாம் பருப்பு
3)முந்திரி
4)ஏலக்காய்
5)பனை வெல்லம்
6)நெய்
7)தேங்காய்
8)வெந்தயம்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 100 கிராம் கருப்பு உளுந்து பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊறவைத்த கருப்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை போடு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 கப் தண்ணீர் சூடாக்கவும்.பிறகு அரைத்த உளுந்து மாவு மற்றும் பனை வெல்லம் சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சவும்.

பிறகு ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.இதை கொதிக்கும் உளுந்து கஞ்சியில் சேர்த்து கலக்கி விடவும்.

பின்னர் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது நெய் சேர்த்து சூடாக்கவும்.அதில் நறுக்கிய முந்திரி மற்றும் நறுக்கிய பாதம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை கொதிக்கும் உளுந்து கஞ்சியில் சேர்த்து கலந்து விடவும்.பின்னர் வாசனைக்காக சிறிது சிறிது ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் உடலுக்கு வலு தரும் உளுந்து கஞ்சி ரெடி.