BREAKING:தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

BREAKING:தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ஆம் தேதி வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளான நவம்பர்-5 வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகள் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதில், பொங்கல் பண்டிகைக்கு தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படும். … Read more

BREAKING:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு.

BREAKING:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10‌.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட சாதியினை சேர்ந்தோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இதில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது … Read more

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

தமிழகத்தின் கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை … Read more

BREAKING: சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.268 உயர்வு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

BREAKING: சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.268 உயர்வு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது .அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. … Read more

இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காது.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காது.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்ட மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவையை இன்று முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் … Read more

தீபாவளி சிறப்பு பேருந்து சேவை.. இன்று முதல் துவக்கம்.!!

தீபாவளி சிறப்பு பேருந்து சேவை.. இன்று முதல் துவக்கம்.!!

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி 20,334 அரசு பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் 3-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2100 … Read more

BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராக உள்ளனர். … Read more

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

இன்றைய (01-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வரவு.? யாருக்கு உயர்வு.?

இன்றைய (01-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வரவு.? யாருக்கு உயர்வு.?

  இன்றைய (01-11-2021) ராசி பலன்கள் மேஷம் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கனிவான பேச்சுக்களின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். எண்ணியது நிறைவேறும் நாள். ரிஷபம் உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். … Read more

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

நேற்று, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு தனித்து உருவான நவம்பர் 1 ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு நாள்’ ஆக கொண்டாடப்பட வேண்டும். … Read more