சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு!

A woman fell into the manhole of an unsealed rainwater drain in Chennai – a tragic incident!

சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு! வடகிழக்கு பருவமழை ஒருசில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியில் மிக கனமழை கடந்த 3 தினங்களாக பெய்து வருகின்றது.  அப்பகுதியில் சாலை முழுவதும் தண்ணீரி மூழ்கியுள்ளது இதனால் மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. சாலையில் … Read more

திராவியாவா தேசிடியாவா? பாஜக மற்றும் திமுகவினர் இடையே சமூக வலைதளங்களில் நடைபெறும் போர்!

நடிகை கஸ்தூரியம் சில பாஜக கட்சியைச் சார்ந்தவர்களும் கடந்த சில தினங்களாக திமுக பயன்படுத்தும் திராவிடம் என்ற வார்த்தையையும், திமுக ஆட்சியை விடிய அரசு என்ற அர்த்தத்திலும், இனைத்து திராவிடியா என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் பயன்படுத்துகின்றன. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா தேசிடியா என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளார். திமுகவில் மற்றவர்களும் இதே வார்த்தையை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார். ஆகவே சமூக வலைதளங்களில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த … Read more

அய்யய்யோ சட்டத்தை மீறிவிட்டார்! உடனே வாபஸ் பெறுங்கள் கதறும் கூட்டணி கட்சிகள்!

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆளுநர் தொடர்ந்து பேசி வருவதாக கண்டனம் தெரிவித்திருக்கின்ற திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். அதோடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, கே எஸ் அழகிரி, வைகோ, கே பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டணிக்கை ஒன்றையும் வெளியிட்டு … Read more

என்னை காதலித்து விட்டு எப்படி வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம்? கொதித்தெழுந்த காதலனை ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலி!

களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன் கரை பகுதியைச் சார்ந்தவர் சாரோன் ராஜ் இவர் ராமவர்மன் சிறை பகுதியைச் சார்ந்த கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், இருவரின் காதலுக்கும் கிரீஷ்மாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய வீட்டில் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். நல்ல பணக்கார இடம் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்கள். இந்த நிலையில், பணத்தைப் பார்த்து மயங்கிய அந்தப் பெண் புது மாப்பிள்ளை திருமணம் … Read more

சென்னை ஏரிகளின் நீர் இருப்பு கிடுகிடு உயர்வு! வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் நிரம்பியுள்ளனர் இதனால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் மூன்று மணி அளவில் நிரம்பப்பட உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 சென்டிமீட்டர் மழை பதிவானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஆகவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 செண்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 11.2 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் … Read more

தொடர்மழைக்கும் மத்தியில் நிகழ்ந்த சில சுவாரசிய சம்பவங்கள்! மழை படுத்தும் பாடு!

தொடர்மழைக்கும் மத்தியில் நிகழ்ந்த சில சுவாரசிய சம்பவங்கள்! மழை படுத்தும் பாடு! சென்னை குரோம்பேட்டையில் பிராட்வேக்கு சென்ற பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பைப்பிள் தண்ணீர் கொட்டுவது போன்று வழிந்த மழை நீரால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை பிராட்வே பகுதியில் இருந்து மூலக்கடை நோக்கிச் சென்ற பேருந்து வியாசர் பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம்! திருமாவளவன் ஆவேசத்திற்கு பின்னால் ஆளும் தரப்பு ஒளிந்து இருக்கிறதா?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் குறித்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் பாஜகவினரும், ஆளுணரும் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமாவளவனனை பொறுத்தவரையில் அரசியலுக்கு ஒரு கொள்கை தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு ஒரு கொள்கை என்று வாழ்ந்து வருபவர். இந்து மதக் கொள்கையை மிக கடுமையாக … Read more

தீவிரமடையும் பருவமழை! இந்த 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 29ஆம் தேதி வடகிழக்க பருவமழை ஆரம்பமானது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. அதோடு மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருப்பதாலும் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 14 மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து இருப்பதாலும் தமிழ்நாடு மற்றும் … Read more

தமிழகத்தில் உண்மையிலேயே பெண்களுக்கான ஆட்சி தான் நடைபெறுகிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக் இவர் கடந்த 26 ஆம் தேதி ஆர் கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜகவின் பெண் நிர்வாகிகளும், நடிகைகளும் ஆன குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரஹராம் வெளியிட்டவர்கள் தொடர்பாக தரக்குறைவாக பேசினார் அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவியது. இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதாஸ் சாதிக் என்பவர் மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகளை தவறாக பேசியதை … Read more