கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி!

Disaster caused by KTM Baikal! Thai Sei both died!

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி! சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி.இவருடைய மனைவி பூங்குழலி.இவர்களுக்கு ஆறு வயதில் மகளும்.எட்டு மாதத்தில் மகளும் உள்ளனர். மேலும் சஞ்சீவ் காந்தி அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகின்றார்.கடையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கும் அதற்கு முன்பாக கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்திருந்தனர்.அதற்காக பூங்குழலி மற்றும் சஞ்சீவ் அவர்களுடைய குழந்தைகளுடன் காலை 4மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அண்ணா … Read more

அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!

ராஜராஜ சோழன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை என்று குறிப்பிட்டார். பெயரே இல்லாத மதமாக இருந்ததால் வெளியில் இருந்தவர்கள் தான் பெயர் வழங்கினார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் இது தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவிற்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். … Read more

என்ன மேடம் நீங்களே இப்படி பேசலாமா? தமிழிசையை வாரிய திமுக!

முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2து முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டி ஆர் பாலு அவர்களும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி, பொன்முடி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான … Read more

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! யார் யார் பங்கேற்பார்கள்?

அதிமுகவில் உண்டான ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டுள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியும் இந்த பொதுக்குழுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே பன்னீர்செல்வம் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி என்று அதிமுக இரண்டாக செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் வேதனையில் இருந்து … Read more

எப்பா அந்த செருப்பை எடுத்துட்டு வா! பொது மேடையில் திமுக பொருளாளரால் உண்டான சர்ச்சை!

திமுகவின் பொதுக்குழு கூட்ட மேடையில் தற்போதைய திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு அவர்களின் காலணியை தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது அதில் புதிய நிர்வாகிகள் உள்ளிட்டோரை அறிவித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படத்திற்கு மலருதுவை மரியாதை செய்தனர். அதற்கு முன்னர் தங்களுடைய … Read more

இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு. தஞ்சை, நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பிற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது! மீறினால் 3 ஆண்டு சிறை!

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு இலட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதற்காக தொடர் வண்டியில் பயணம் செய்வார்கள். அப்படி செல்லும்போது மக்கள் தங்களுடைய உடைமைகளுடன் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதாக தீப்பற்றக்கூடிய தன்மை இருக்கிறது என்பதால், தீ பிடித்து விபத்துக்கள் உண்டாகாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்வண்டியில் பயணம் செய்யும் போது எளிதில் தீ பிடிக்கக்கூடிய சிகரெட், தீப்பெட்டி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை … Read more

தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சீண்டினால் அவ்வளவுதான்! சீறும் உதயநிதி ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…. என்ற நூலை திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டசபை உறுப்பினருமான சி.வி.எம் பி எழிலரசன் தொகுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த நூலை சென்னை சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி … Read more

அதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

சென்னை ராயப்பேட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் உட்பட அனைவரும் விரும்பினார்கள். ஆனால் கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே 100% இணைப்புக்கு வாய்ப்பே கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என கூறியிருக்கிறார் புகழேந்தி. எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார் சுயலாபத்திற்காக பன்னீர் செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று அவர் கூறி வருகிறார். மேலும் … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை உரையாற்றுகிறார் அண்ணாமலை! 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க ஆர்வம்!

தமிழக பாஜகவின் தலைவர் அம்மா மலை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கு பயணமானார் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, சர்வதேச தலைவர் பெல்லோ ஷிப் என்ற பயிற்சி வகுப்பை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒரு வார கால பயிற்சி … Read more