எகிப்தில் உள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரகவாசிகளே: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்

உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர்கள் வேற்று கிரகவாசிகள் தான் என டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவரான எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.   ஆனால் இதனை, எகிப்து அரசின் சர்வதேச ஒத்துழைப்பு துறை அமைச்சர் இதனை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த சூழ்ச்சி கருத்து தவறானது என்பதற்கு பிரமிடுகளில் உள்ள கல்லறைகளே சாட்சியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.     … Read more

கட்டுக்குள் வராத காட்டுத்தீ:அமெரிக்காவில் புதிய சிக்கல்

அமெரிக்கா கலிபொர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரேன காட்டுத்தீ உருவானது . காட்டுத்தீயால் பல்வேறு வாழ்விடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீவிர முயற்சியில் இடுப்பட்டு வருகின்றனர். ரிவர்சைட் கவுண்டி மாகாணத்தில் தொடந்த தீ மிக வேகமாக பரவி காட்டுத்தீயாக உருவேடுத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள 8 ஆயிறத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ச்சியில் 700 ஏக்கர் பரப்பளவில் இருந்த காட்டுத்தீ , இரண்டே தினங்களில் மளமளவென பரவி 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு … Read more

நீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை!!!

உலக சந்தையில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தை, கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சி காணும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர். உலகில் வளர்ந்த மற்றும் முக்கிய  பொருளாதாரங்களை கொண்டுள்ள பல நாடுகளும் கூட பொருளாதாரம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனாவால் உலக சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என்ற அச்சமும், 20 ஆண்டுகளுக்கு காணாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை காணும் நிலை ஏற்படுமோ என்ற பயமும் … Read more

கரோனாவால் பெற்ற நிவாரண நிதியைப் பயன்படுத்தி லம்போர்கினி கார் வாங்கிய நபர்.

புளோரிடாவில் உள்ள ஒருவர், அமெரிக்காவில் பொது முடக்கத்தால் போராடும் வணிகங்களை மீட்டெடுக்க, கோவிட் -19 நிவாரண நிதியாக சுமார் நான்கு மில்லியன் டாலர்களைப் பெற்றார். அவர் தனது ஆடம்பர செலவுகளுக்காக அதை தவறாகப் பயன்படுத்தி, லம்போர்கினி ஹுராக்கன் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியுள்ளார்.   டேவிட் ஹைன்ஸ் என அடையாளம் காணப்பட்ட 29 வயதான இந்த நபர் மியாமி கடற்கரை ரிசார்ட்டில் ஆடம்பரமாக தங்கியிருப்பதற்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்தினார் என்பதும் தெரியவந்தது.   “புளோரிடாவில் இந்த நபர் கைது … Read more

பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

சர்வதேச விண்வெளியான நாசா ,கடந்த மே மாதம் ஆராய்ச்சிக்காக பாப் பென்கென் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் இரண்டு பேரை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தின் மூலமாக பூமிக்கு திரும்ப தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா … Read more

ஊரடங்கினை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகில் பல்வேறு நாடுகளிலும் முழுவதுமாக பொது முடக்கம் கொண்டுவந்துள்ளது. அதனை எதிர்த்து வீதிகளில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் மாகாணத்தில் ஊரடங்கினை எதிர்த்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கருணா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தில் நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என எழுதிய … Read more

 # Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்!

# Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்! சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,000 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு. இன்று காலை தொடங்கியதும் ஆபரண தங்கத்தின் விலை ரூ 224 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41, 424 க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் தங்கத்தின் … Read more

மக்களே உங்கள் செல்லப் பிராணிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்:?நாயையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்

உலக நாடுகளில் அச்சுறுத்திவரும் கொரோனா கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவை தாக்க தொடங்கியது. கொரோனா நோய் தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருவதை நம் தினமும் செய்தியின் மூலம் கேட்டிருப்போம்.இந்த நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கும் முறையில் அந்தந்த நாட்டு மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நோயால் மனிதர்கள் பலர் நோய் தொற்றுக்கு ஆழகி உயிரிழந்துள்ளனர்.ஆனால் அமெரிக்காவில் கொரோனா நோயால் நாய் பாதிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் … Read more

டிக்டாக்-ற்க்கு பதில் வேறொரு செயலி பயன்பாட்டிற்கு வரும்!!அமெரிக்கா அதிரடி?

பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆஃப்கள் தடை செய்யப்பட்டன.தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் டிக்டாக் செயலிக்குபதில் வேறொரு செயலியை பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகின்றன. இந்நிலையில் சீனாவுக்கு எதிராக பல பொருளாதார கோட்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்கா.இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் மற்றும் டிரம்பின் உயரதிகாரிகளும் டிக்டாக் செயலி தடை செய்வதற்கு கோரிக்கை … Read more

கொரோனா ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர் இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல் வெளியானது முதியவர்களுக்கு பரவியது போலவே குழந்தைகளுக்கும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   பொதுமக்களிடையே கொரேனாவை பரப்புவதில் குழந்தைகள் முக்கியமான காரணமாக இருப்பார்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது குழந்தைகள் அதிக இடங்களில் பரப்ப வாய்ப்பு இருக்கிறது அதனால் … Read more