பெண்களே.. நீர்க்கட்டி பாதிப்புக்கு ஒரே மாதத்தில் தீர்வு வேண்டுமா?

0
65
#image_title

பெண்களே.. நீர்க்கட்டி பாதிப்புக்கு ஒரே மாதத்தில் தீர்வு வேண்டுமா?

கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி என்பது பெண்களின் உடலில் ஏற்படும் குறைபாடு ஆகும். இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்கு எளிதில் சினைப்பை நீர்க்கட்டி உருவாகி விடுகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது.

இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பெண்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் இந்த நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்ய அம்மன் பச்சரிசி இலை பானம் செய்து குடிப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*அம்மன் பச்சரிசி இலை பொடி – 1 1/2 தேக்கரண்டி

*கற்கண்டு – தேவையான அளவு

*வெந்நீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

முதலில் 1 கைப்பிடி அளவு அம்மன் பச்சரிசி இலை எடுத்து நிழலில் உலர்திக் கொள்ள வேண்டும். பின்னர் இவை நன்கு காய்ந்ததும் ஒரு மிக்ஸி ஜார் அல்லது உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த சூடு படுத்திய தண்ணீரை ஒரு கிளாஸூக்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள அம்மன் பச்சரிசி இலை பொடியில் இருந்து 1 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து சூடு நீரில் போட்டு கலந்து விடவும்.

அடுத்து சுவைக்காக சிறிதளவு வெள்ளை கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு பெண்கள் தொடர்ந்து செய்து பருகி வருவதன் மூலம் கர்ப்பபையில் உள்ள நீர்க்கட்டி கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.