மலச்சிக்கல்? 2 பொருள் போதும்.. உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேறி விடும்!!

0
33
#image_title

மலச்சிக்கல்? 2 பொருள் போதும்.. உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேறி விடும்!!

இன்றைய கால உணவு முறையில் அதிக ருசி இருந்தாலும் அதில் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலளவில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றோம். நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்களை தவிர்த்து துரித உணவுகளை எடுத்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனையால் எளிதில் பாதித்து விடுகின்றோம். இதனை நாம் கண்டு கொள்ளாமல் விடுவதினால் இது குடல் சார்ந்த பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விடுகின்றது.

மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது, குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது மலச்சிக்கல் பொதுவான காரணங்களாக சொல்லப்படுகின்றது. இதனை வெறும் 2 பொருட்களை பயன்படுத்தி சரி செய்ய முடியும்.இவ்வாறு செய்வதன் மூலம் மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை பழம் – 1

*கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 1 எலுமிச்சம் சாறு பிழிந்து அதை சூடேறிக் கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் சூடேறி வெது வெதுப்பான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இதையடுத்து ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்து அதில் தேவைக்கேற்ப கல் உப்பு சேர்த்து கலக்கி அதனை குடிக்க வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள உப்பு, எலுமிச்சை சாறு கலந்த 1/2 லிட்டர் தண்ணீரை தொடர்ந்து குடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்று பகுதியில் அடைப்பட்டு கிடந்த நாள்பட்ட கழிவுகள் அனைத்தும் வெளிவர தொடங்கும். இதனால் குடல் சுத்தம் செய்யப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.